Skip to main content

'ஸ்ரீலீக்ஸ்' ஸ்ரீரெட்டியை தொடர்ந்து நடிகை ஸ்வரா பாஸ்கரும்....

Published on 03/07/2018 | Edited on 03/07/2018
swara bhaskar

 

 

 

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை தற்போது பெரும்பான்மையான நடிகைகள் பாலியல் தொல்லை குறித்து வாய் திறக்க ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி செக்ஸ் தொல்லை கொடுத்தவர்கள் பெயர்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். இதை தொடர்ந்து மலையாளம் இந்தி நடிகைகளும் பாலியல் தொல்லை குறித்து பேச ஆரம்பித்தனர். இந்நிலையில் ஹிந்தி நடிகை ஸ்வரா பாஸ்கரும் தனக்கு தயாரிப்பாளர் ஒருவரால் பாலியல் தொல்லை ஏற்பட்டதாக தற்போது புகார் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் பேசும்போது.... "பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கிறது. எனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டது. பெரிய தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். எனக்கு முத்தமிடவும் முயற்சித்தார். நான் அதை அனுமதிக்கவில்லை. திரையுலகில் இதுமாதிரி செக்ஸ் தொல்லைகள் இருக்கும் என்று முன்பே எனக்கு தெரியும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கிறேன். ஆண்களுக்கு இணையாக பெண்களை நடத்த வேண்டும். நடிகைகள் விருப்பம் என்ன என்பதை கேட்ட பிறகே அவர்களை அணுக வேண்டும். விருப்பம் இல்லாதவர்களை தொந்தரவு செய்யக்கூடாது" என்றார்.

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்