ADVERTISEMENT

“சாப்பாட்டுக்கே வழியில்லாம இருக்கேன்...”- ஏழ்மையில் வாடும் பிரபல நடிகர்!

04:18 PM Aug 14, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

'தூரல் நின்னு போச்சு' என்னும் படத்தின் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சூர்யகாந்த். இதனைத் தொடர்ந்து பல படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்தவர். சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

கரோனா அச்சுறுத்தலால் ஷூட்டிங் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாக உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “நான் இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் 'தூரல் நின்னு போச்சு' படத்தில்தான் அறிமுகமானேன். தொடர்ந்து 'இன்று போய் நாளை வா', 'ராசுக்குட்டி' உள்ளிட்ட படங்களில் நடித்தேன். பாரதிராஜாவின் படங்களான 'மண்வாசனை', 'கிழக்குச் சீமையிலே' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளேன்.

கொஞ்ச நாளா ஷூட்டிங் இல்ல, சீரியல் ஷூட்டிங்கும் சரியா நடக்கல. அதனால் பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கேன். நான் இப்போ சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாம இருக்கேன். தயவுசெய்து உதவுங்க'' என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT