Skip to main content

"இது வெறும் ஆரம்பம்தான்" -சுரேஷ் ரெய்னாவை வாழ்த்திய சூர்யா..

Published on 28/11/2020 | Edited on 28/11/2020
suriya raina

 

 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா. இவர் சமீபத்தில், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். மிஸ்டர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் ரெய்னா, இந்தாண்டு ஐ.பி.எல் தொடரிலும் ஆடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக, அத்தொடரிலிருந்து விலகிய ரெய்னா, ஜம்மு காஷ்மீரில் உள்ள, பின்தங்கிய சிறுவர் மற்றும் இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க, கிரிக்கெட் அகாடமி தொடங்கும் முயற்சியில் தீவிரமாக  ஈடுபட்டுவருகிறார்.

 

சுரேஷ் ரெய்னாவும், நடிகர் சூர்யாவும் நண்பர்களாவார்கள். என்.ஜி.கே. படத்தின் விளம்பரத்திற்காக, சூர்யா சமூக வலைதளத்தில் லைவ் வந்தபோது, அதில் சுரேஷ் ரெய்னா கலந்துகொண்டு, உங்களுக்கு பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் யார்? என கேட்டதும், அதற்கு சூர்யா தோனி என பதிலளித்தோடு, லைவில் கலந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

 

இந்தநிலையில், சுரேஷ் ரெய்னா தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினர். அவருக்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா, ஜம்மு & காஷ்மீர்  கிரிக்கெட்டர்களின் திறமையை வெளிக்கொணர ரெய்னா எடுக்கும் முயற்சியை பாராட்டியதோடு, இது வெறும் ஆரம்பம்தான் என கூறியுள்ளார். இதுகுறித்து சூர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில், "நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. ஜம்மு & காஷ்மீரின் வளரும் கிரிக்கெட்டர்களோடு நீங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள். உங்களுக்கு மகிழ்ச்சியான பிறந்தநாளாக அமைய வாழ்த்துகிறேன். இது வெறும் ஆரம்பம்தான்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி வைத்த சூர்யா - வெளியான சர்ப்ரைஸ் அறிவிப்பு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
karthick subburaj directing suriyas 44th film

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தை தொடர்ந்து தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்துள்ளார். துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான அறிவிப்பு வீடியோவில், படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு  'புறநானூறு' என்ற டேக் லைன் மட்டும் இடம் பெற்றிருந்தது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள நிலையில் அவருக்கு 100வது படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் மதுரையில் உள்ள கல்லூரியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சூர்யா நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சூர்யாவின் 44ஆவது படமாக உருவாகும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. யாரும் எதிர்பாராத சர்ப்ரைஸாக இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளார்கள். ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தை சூர்யா கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்புராஜ், கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஜய்யை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது . ஆனால் தற்போது சூர்யாவுடன் திடேரென்று கைகோர்த்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Next Story

ரீ ரிலீஸுக்கு தயாராகும் சூர்யா படம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
anjaan re release update

வெற்றி பெற்ற பழைய படங்களை மீண்டும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ரீ ரிலீஸ் செய்யப்படுவது நீண்ட காலமாக இருந்து வருகிறது. சமீப காலமாக ரீ ரிலீஸ் செய்யும் படங்கள் அதிகரித்து வருகின்றன. எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி தற்போது இருக்கும் முன்னணி நடிகர்கள் படங்கள் வரை தொடர்ந்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான பையா படம் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போது படம் முடிந்ததும் இயக்குநர் லிங்குசாமி திரையரங்கிற்கு வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். 

anjaan re release update

அப்போது அவர், அஞ்சான் படத்தை ரீ எடிட் செய்துள்ளதாகவும் அதை மீண்டும் திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அஞ்சான். லிங்குசாமியே தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகரக்ள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி பின்பு கலைவையான விமர்சனத்தையே பெற்றது குறிப்பிடத்தக்கது.