Skip to main content

சூர்யா ரசிகர்களுக்கு விருந்து வைத்த காப்பான் படக்குழு!

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

என்ஜிகே படத்தை தொடர்ந்து சூர்யா நடித்து வெளியாக இருக்கும் படம் ‘காப்பான்’. மாற்றான் படத்திற்கு பின் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் இது. மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். முதல் படம்‘அயன்’ஹிட்டை போல இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காப்பான் படத்தின் படபிடிப்பு முடிந்து ரிலீஸுக்கான வேலையில் உள்ளதால் இந்த படத்தின் மீத் பலத்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். மே 31ஆம் தேதி என்.ஜி.கே வெளியான பின்பு வெகு விரைவில் காப்பான் படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
 

kappan

 

 

காப்பான் படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் இரண்டு நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் காப்பான் படத்தின் அப்டேட் ஒன்று விரைவில் தெரிவிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். அதனை அடுத்து, என்னவாக இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குழம்பி தவித்தனர். காப்பான் படத்தின் டீஸர் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடுவார்கள் என சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் வந்தது. 
 

இந்நிலையில், கே.வி. ஆனந்த் ட்விட்டர் பக்கத்தில் காப்பான் போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காப்பான் படத்தின் டீஸர் இரவு 7 மணிக்கு வெளியிடப்படும் இருந்தது. மேலும் அதனுடன் ‘ ஆம் , நீங்கள் அனைவரும் நினைத்ததை போல காப்பான் படத்தின் டீஸர்தான் வெளியாகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். 
 

 

 

காப்பான் படத்தில் சூர்யா பிரதமரின் பாதுகாவலராக நடிப்பதாகவும் மோஹன் லால் பிரதமராக நடிப்பதாக முன்னமே தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சூர்யாவுடன் மோஹன் லால், ஆர்யா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லைகா தயாரிப்பு நிறுவனம் இதை தயாரித்து வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மோகன்லாலுக்காக படக்குழுவிற்கு சோறு போட்ட சூர்யா !

Published on 22/02/2019 | Edited on 22/02/2019
surya

 

 

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'காப்பான்' படத்தின் படப்பிடிப்பு கிழக்கு கடற்கரை சாலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதில் நடிக்கும் மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்தததாக படக்குழு தற்போது அறிவித்துள்ளனர். மேலும் இதை கொண்டாடும் வகையில் சூர்யா படக்குழுவிற்கு பிரியாணி விருந்து அளித்தார். சூர்யாவுடன் இணைந்து ஆர்யா நடித்து வரும் இப்படத்தின் பாடல் காட்சி தற்போது படமாகி வருகிறது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக அமெரிக்கா சென்று அங்கு ஒரு பாடலை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர். சாயிஷா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Next Story

Choose the best title... போட்டி வைத்த கே.வி.ஆனந்த்...சூர்யா ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு !

Published on 26/12/2018 | Edited on 26/12/2018
kv anand

 

 

சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நாயகியாக சாயிஷா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, பாலிவுட் நடிகர் சிரக் ஜனி ஆகியோர் நடிக்கின்றனர். சூர்யாவின் 37வது படமாக உருவாகும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் நிலையில் இப்படத்திற்கு தலைப்பாக மீட்பான், காப்பான், உயிர்கா என மூன்று தலைப்புகளை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் நேற்று பதிவு செய்து, ரசிகர்களிடையே வாக்கு கேட்டுள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த். இதில் ‘உயிர்கா’ என்ற தலைப்பிற்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. எனவே ‘உயிர்கா’ என்ற தலைப்பை படத்திற்கு வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பட டைட்டிலை ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு அன்று வெளியிடவுள்ளதாகவும் தற்போது அறிவித்துள்ளார்.