என்.ஜி.கே படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது சூரரைப்போற்று படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகும் இப்படம் ஏர் டெக்கான் என்று அழைக்கப்படுகிற கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.

Advertisment

gv prakash

இப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு முன்னமே நடந்து முடிந்த நிலையில் அபர்னா பாலமுரளி சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்ததாகவும், அவருக்கான ஷூட்டிங் பகுதி நிறைவடைந்துவிட்டதாகவும் படக்குழு அறிவித்திருந்தது.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்நிலையில் அவர் ட்விட்டரில் இந்த படத்திற்கான முதல் பாடல் முடிந்துவிட்டது. அது ஒரு குத்துப் பாடல் அதை பாடலாசிரியர் ஏகாதசி எழுத செந்தில் கணேஷ் பாடியிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். அதனுடன் இயக்குனர் சுதா, செந்தில் கணேஷ், ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் இருப்பதுபோல ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.