Advertisment

இம்மாத இறுதியில் லண்டனுக்கு செல்லும் சூர்யா 

surya

Advertisment

செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே.' படத்தில் தற்போது நடித்து வரும் சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். சூர்யா - கே.வி.ஆனந்த் மூன்றாவது முறையாக இணையும் இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. முதன்முறையாக இப்படத்திற்கு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத உள்ளார். சாயிஷா சைகல் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். இம்மாத (ஜூன்) இறுதியில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கி தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ளது. மேலும் அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்புகளை சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்பட பல்வேறு வெளிநாடுகளிலும் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர். சூர்யா நடிப்பில் உருவான ‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Surya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe