கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில்‘சூரரைப் போற்று’ திரைப்படம் வெளியானதுஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும் அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.
இப்படத்தை தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தியிலும் இயக்க, சூர்யா கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். கதாநாயகியாக ராதிகா மதன் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நிறைவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில்முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் சூர்யா கௌரவ வேடத்தில் நடிப்பதாகதகவல் வெளியான நிலையில் அதனை தற்போது சூர்யா உறுதி செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தைதனது சமூக வலைதள பக்கத்தில்பகிர்ந்த சூர்யா அக்ஷய் குமாருடன் சூரரைப்போற்று படத்தின் சிறு கௌரவ தோற்றத்தில் நடிப்பதுமகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.இதேபோன்று சமீபத்தில் வெளியான 'விக்ரம்'படத்திலும்சூர்யா கௌரவ வேடத்தில் நடித்திருந்ததுகுறிப்பிடத்தக்கது.