surya and karthi voted tn urban local election 2022

Advertisment

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில்ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு இடையே நடைபெறும் தேர்தல் என்பதால் வாக்குப்பதிவு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் அரசியல் பிரமுகர்களும் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர்கள் விஜய், அருண் விஜய், கவிஞர் வைரமுத்து, நடிகைஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல திரைபிரபலங்கள்தங்களுடைய வாக்குகளை செலுத்தியுள்ள நிலையில் தற்போது சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்கு சாவடியில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் வாக்களித்துள்ளனர்.