Skip to main content

'சூர்யா 41'... வதந்திகளுக்கு புகைப்படத்துடன் முற்றுப்புள்ளி வைத்த சூர்யா

Published on 26/05/2022 | Edited on 26/05/2022

 

surya 41 movie shoot resume soon

 

'எதற்கும் துணிந்தவன்' படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் 'சூர்யா 41' நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க, சூர்யாவின் தங்கை கதாபாத்திரத்தில்  மலையாள நடிகை மமீதா பைஜூ நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. மீனவர் சமூகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. 

 

கன்னியாகுமரி பகுதியில் முழு வீச்சில் நடைபெற்று வந்த இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனிடையே படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவிற்கு, பாலாவிற்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா இப்படத்தில் இருந்து வெளியேறியதாகவும், இப்படம் கைவிடப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவலாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை மறுத்த பட தயாரிப்பு நிறுவனம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் கோவாவில் தொடங்கும் என அறிவித்தது. இருப்பினும் அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் சந்தேகம் எழுந்தது. 

 

இந்நிலையில் நடிகர் சூர்யா இப்படம் குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், மீண்டும் சூர்யா 41 படப்பிடிப்புக்கு வர காத்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டு படம் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அத்துடன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில் சூர்யா மாஸான லுக்கில் தோன்றியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அசைவம் ஊட்டி விடுவாரு” - கண்ணீர் மல்க சூர்யா அஞ்சலி!

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Surya tribute to Vijayakanth

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பில் இருந்த நடிகர், நடிகைகள் ஒவ்வொருவராகத் தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யா இன்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவிட்டு, விஜயகாந்த் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். 

சூர்யா பேசியதாவது, “அண்ணனோட இந்த பிரிவு ரொம்ப துயரமானது. மனசு அவ்ளோ கஷ்டமாயிருக்கு. ஆரம்ப காலத்தில் நான் நடித்த படங்கள் எனக்கு பெரிய பாராட்டை பெற்றுத் தரவில்லை. பெரியண்ணா படம் அவரோட சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைச்சது. ஒவ்வொரு நாளும் சகோதர அன்போடு இருப்பாரு, அப்பாவிற்காக வேண்டிக்கொண்டு நான் அசைவம் சாப்பிடுவதில்லை, அப்ப அவர் ஒரு வார்த்தையை உரிமையா சொல்லி ஏன் சைவம் சாப்பிடுறேன்னு திட்டி அவருடைய தட்டிலிருந்து எடுத்து சாப்ட வச்சாரு, நடிக்கிறவனுக்கு உடம்பில் சத்து வேண்டும்னு ஊட்டிவிடுவாரு”

“அவரோட நடிச்ச நாட்களில் பிரமிச்சு பார்த்தேன். அவரை இலகுவாக அனைவரும் அணுகலாம். கலைநிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்றபோது அவருடைய உழைப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அவர் மாதிரி யாரும் கிடையாது. இறுதி அஞ்சலியில் அவர் முகம் பார்க்க முடியாதது என்பது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சிக்காரர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார். விஜயகாந்த் இறந்தபோதே சூர்யா வீடியோ வெளியிட்டு தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு சூர்யா, கார்த்தி, சிவக்குமார் ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். 

Next Story

“பாலுமகேந்திராவுக்கு நோ சொன்னதும் பாலா ஃபோன் அடிச்சாரு” - நக்கீரன் ஆசிரியர்

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
Nakkheeran Gopal | Koose Munisamy Veerappan |

 

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் வருகிற 14 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியது படக்குழு. 

பத்திரிகையாளர் சந்திப்பின்போது நக்கீரன் ஆசிரியர் வீரப்பனைப் பற்றி படம் எடுப்பதற்காக தன்னை தொடர்பு கொண்டவர்களைப் பற்றி ஒரு விசயத்தை பகிர்ந்து கொண்டார். அதாவது, ‘வீரப்பனை பற்றி படம் எடுப்பதற்காக பலர் அவரை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் இயக்குநர் பாலுமகேந்திரா. அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு நக்கீரன் ஆசிரியரை நேரில் சந்தித்து, வீரப்பனை பற்றி படம் எடுக்கப் போவதாகவும், தாங்கள் சேகரித்து வைத்திருப்பதை தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். நாளைக்கு சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டு, மறுநாள் காலை ஃபோனில் அழைத்து மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதற்காக இயக்குநர் பாலா நக்கீரன் ஆசிரியரை தொடர்பு கொண்டு, “என் குருநாதர் கேட்டே நீங்க தரமாட்டேன்னு சொல்லிட்டீங்களா” என்றிருக்கிறார். நேர்ல வாங்கண்ணே பேசுவோம் என்று நக்கீரன் ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.