Suriya's accident on the set of kanguva

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளுக்கு மேலாக வெளியாக உள்ள இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் அடுத்த வருடம் ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Advertisment

ad

இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோசூர்யாவின் பிறந்தநாளன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதையடுத்து சென்னையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் அந்த படப்பிடிப்பில் விபத்து நடந்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. நேற்று, படப்பிடிப்பின் போது ரோப் கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் மோதியுள்ளதாகவும் அதில் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்து காரணமாக இன்று படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாகத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.