Skip to main content

"அவ்ளோ சந்தோஷம் தருது... ரொம்ப ரொம்ப நன்றி சார்" - இயக்குனருக்கு சூர்யா  நன்றி!

Published on 19/11/2020 | Edited on 19/11/2020

 

suriya

 

நடிகர் சூர்யாவை, தனது 'நேருக்கு நேர்' படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர், இயக்குனர்  வசந்த். தற்போது, 'சூரரைப் போற்று' படம் வெளியாகி, சூர்யாவின் நடிப்பிற்குப் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், இயக்குனர் வசந்த் சூர்யாவிற்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.  

 

அந்தக் கடிதத்தில், "அன்புள்ள சூர்யாவுக்கு, இந்தப் பாராட்டுக் கடிதம் உனக்கு இல்லை... நெடுமாறன் இராஜாங்கத்திற்கு. முதல் ஃப்ரேமில் இருந்து, ரோலிங் டைட்டில் ஒடுகிற கடைசி ஃப்ரேம் வரை, உன் ஆட்சிதான். ஃபிரேம்க்கு ஃப்ரேம், சீனுக்கு சீன் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறாய். தமிழ்த் திரையுலகில் என் மூலம் நிகழ்ந்த, உன் அறிமுகத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீயாகவே முயன்று, கற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக உன் நடிப்பை, இதுவரை பல படங்களில் வெளிப்படுத்தியிருந்தாலும், இது, இதுதான் உன் உச்சம்! இப்போதைக்கு!!! 

 

நெடுமாறன் ராஜாங்கமாக நீ நடிக்கவே இல்லை. இரத்தமும் சதையுமாக உணர்ந்து வாழ்ந்திருக்கிறாய். முதல் காட்சியின் ஆரம்பம் கூட பரவாயில்லை. இறுதியில் நீ வென்ற பிறகு கூட உன் முகத்தில் சிரிப்பு இல்லை. அந்த தீவிரத்தன்மை, அந்த சாதிக்க வேண்டும் என்ற வெறி, உன் கண்களில் இறுதிவரை தெரிக்கிறது. கனல் மணக்கும் பூக்களாக... ஒவ்வொரு காட்சியிலும் நெடுமாறன் தோற்கும் போது, ஒவ்வொரு காட்சியிலும் ஜெயிக்கிறது, உன் நடிப்பு. எவ்வளவு இயல்பாக, அதுவும் இவ்வளவு இயல்பாக, எதார்த்தமாக துளி மிகையில்லாமல் ஒரு கதாபாத்திரத்திற்கு மிகச்சிறப்பாக உயிரூட்டியிருக்கிறாய்.

 

cnc

 

உன் வெற்றியின் பெருமிதத்தில் நான் ஒரு தொப்பியை மாட்டிக்கொண்டு சொல்கிறேன். 'ஹேட்ஸ் ஆப் டூ மை டியர் சூர்யா...' என்னை விட யாருக்கு மகிழ்ச்சி இருந்துவிட முடியும் ஏனென்றால் என் விதை நீ, என் விருட்சம் நீ, எனக்கு எத்தனை பெருமிதம் என்று எழுதி முடியாது என உச்சிமுகந்து, உச்சிமுகந்து மகிழ்கிறேன்" என சூர்யாவை பாராட்டியிருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து சூர்யா, இயக்குனர் வசந்திற்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் வசந்த் எழுதிய கடிதத்தை ரீ-ட்விட் செய்துள்ள அவர், "உங்க பாராட்டு அவ்ளோ சந்தோஷம் தருது சார்..!!! நான் என்றுமே நீங்கள் விதைத்த விதை தான்..! ரொம்ப ரொம்ப நன்றி சார்" எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருது விழா - பரிசு பெற்ற திரைப் பிரபலங்கள்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விழாவிற்குத் தலைமையேற்று விருது அறிவித்தவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கினார். மேலும் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விருது அறிவிக்கப்பட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு விருது, சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொண்டனர்.
 

Next Story

சூர்யாவுக்கு ஜோடியாகும் இளம் கதாநாயகி

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
aditi shankar to pair suriya in new film

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. வருகிற ஏப்ரலில் இப்படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. 

ad

இப்படத்தை தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்துள்ளார். துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான அறிவிப்பு வீடியோவில், படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு  'புறநானூறு' என்ற டேக் லைன் மட்டும் இடம் பெற்றிருந்தது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள நிலையில் அவருக்கு 100வது படமாக அமைந்துள்ளது. சமீபத்தில் இப்படத்திற்கான பாடல் ஒன்றை பாடகி தீ குரலில் பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் மதுரையில் உள்ள கல்லூரியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக கடந்த ஆண்டு மத்தியில் தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது இதே தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. விரைவில் கதாநாயகி குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.