suriya ready to start  sudha kongara project before vetrimaaran movie

சூர்யாதற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். ’சூர்யா 42’ எனத்தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கயோகிபாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், சிறுத்தை சிவா படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறனின்'வாடிவாசல்' படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தள்ளிப்போக உள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. வாடிவாசல் படத்திற்கு முன்பாகமீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா ஒரு படம் நடிக்கவுள்ளதாகவும்கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

இவர்கள் இருவரின்கூட்டணியில் முதல் படமாக உண்மைக் கதையைத்தழுவி எடுக்கப்பட்டு வெளியான 'சூரரைப் போற்று' படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று 5 தேசிய விருதும் வாங்கிய நிலையில்,சுதா கொங்கராவுடன்மீண்டும் சூர்யா இணையவுள்ளதாகக் கூறப்படுவதுஇப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அப்படி இரண்டாவது முறையாகக் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் மீண்டும் ஓர் உண்மைக் கதையைத்தழுவி எடுப்பார்களா என்றபேச்சுகள் எழத் தொடங்கியுள்ளன. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைஎதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சுதா கொங்கரா படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிமாறன் தற்போது 'விடுதலை' படத்தின் போஸ்ட் புரொடக்சஷன்பணிகளில்ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளர் தாணு, "படம் கைவிடப்படவில்லை, சற்று தாமதமாகத்தொடங்கும்" என ஒரு ஆங்கில ஊடகப் பேட்டியில் சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.