Advertisment

ரசிகர் மறைவு - வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய சூர்யா

Suriya paid tribute to his fans paased away

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். திரைப்படங்களை தாண்டி தனது ரசிகர்கள் அல்லது ரசிகர் மன்றத்தில் இருப்பவர்கள் யாரேனும் மறைந்தால் அவர்களுக்காக அஞ்சலி செலுத்திவதை வழக்கமாக வைத்துள்ளார் சூர்யா. கடந்த மே மாதம் அமெரிக்காவில், வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடந்த நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் இறந்துள்ளார். இவர் தீவிர சூர்யா ரசிகர் எனத் தெரிய வந்துள்ளதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கு தொலைப்பேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார். மேலும் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தைச் சென்னையில் உள்ள தனது வீட்டில் வைத்து அஞ்சலி செலுத்தினார் சூர்யா.

Advertisment

அதே போல் கடந்த ஜூலை மாதம் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி ஆந்திர மாநிலம் நாசராவ் பேட்டையில் கல்லூரி மாணவர்களான வெங்கடேஷ், சாய் ஆகிய இருவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சூர்யாவின் பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு வீடியோ கால் மூலம் சூர்யா தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கான தேவைகளை செய்து தருவதாக உறுதியளித்தார்.

Advertisment

இந்த நிலையில் சென்னையை அடுத்த எண்ணூர் பகுதியை சேர்ந்த அரவிந்த என்ற இளைஞர் சாலை விபத்தில் உயிரலாந்துள்ளார். இவர் தீவிர சூர்யா ரசிகராகவும் சூர்யாவின் ரசிகர் மன்றத்திலும் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இதையறிந்த சூர்யா எண்ணூரில் உள்ள அந்த ரசிகரின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும் அங்கு அந்த ரசிகரின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

fans actor suriya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe