/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/442_4.jpg)
தமிழ் மற்றும் இந்திசினிமாவில்கவனம் செலுத்தி வரும் மாதவன் இயக்குநராக அறிமுகமாகவுள்ள படம் 'ராக்கெட்ரி- நம்பி விளைவு'. இந்த படம்இஸ்ரோவில்பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதன்மை கதாபாத்திரமான நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 1-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம்ரிலீசிற்குசில நாட்களே உள்ள நிலையில்ப்ரோமோஷன்பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் 'ராக்கெட்ரி- நம்பி விளைவு' படத்தில்சிறப்புத்தோற்றத்தில் நடித்ததற்காக சூர்யா மற்றும்ஷாரூக்கான்இருவருமே ஒரு பைசா கூட வாங்காமல் நடித்துள்ளனர். இதனை மாதவன் படத்தின்ப்ரோமோஷன்பனியின் போது ஒரு ஊடகத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ், இந்தி உள்ளிட்ட ஆறு மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின்சிறப்புத்தோற்றத்தில் தமிழில் சூர்யாவும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஷாருக்கானும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)