/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/370_10.jpg)
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ’சூர்யா 42’. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தில் சூர்யா, அரத்தர், வெண்காட்டார், மண்டாங்கர், முக்காட்டர், பெருமணத்தார் என ஐந்து கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் ’சூர்யா 42’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை திஷா பதானி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெற்று வந்த இப்படப்பிடிப்பில் சூர்யா மற்றும் திஷா பதானி நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் பின்பு மீண்டும் படப்பிடிப்பிற்காக கோவா செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே சூர்யா பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்திலும் வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)