Skip to main content

'எதற்கும் துணிந்தவன்' ஆக மாறிய சூர்யா! 

Published on 22/07/2021 | Edited on 22/07/2021
vbdbdbsxd

 

'சூரரைப் போற்று' படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இருக்கும் சூர்யா, அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, 'சூர்யா 40' என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, முழுவீச்சில் நடைபெற்றது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள நடிகர் சூர்யா, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தார். இதனால் சூர்யா இல்லாத காட்சிகளைப் படக்குழு படமாக்கிவந்த நிலையில், 'சூர்யா 40' படக்குழுவினரோடு நடிகர் சூர்யா சமீபத்தில் இணைந்துகொண்டார். 

 

இதையடுத்து, இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், கரோனா 2ஆம் அலை காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், 'சூர்யா 40' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இப்படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்கவுள்ள நிலையில், 'சூர்யா 40' படத்தை 2022 பொங்கல் வெளியீடாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியானது. இந்நிலையில் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு தற்போது "எதற்கும் துணிந்தவன்" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. ரசிகரகளிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்று வரும் இந்த வீடியோ போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விரைவில் டும் டும் டும்...' - பிரபல நடிகையை காதலிக்கும் வினய்

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

vinay loves vimala raaman

 

தமிழில் 'உன்னாலே உன்னாலே' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது வில்லனாக கலக்கிக்கொண்டு இருப்பவர்  'வினய்'. இவர் ஹீரோவாக மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு போன்ற படங்களில் நடித்துள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான துப்பறிவாளன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரது நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர். அதனை தொடர்ந்து இவர் வில்லனாக நடித்து வெளிவந்த 'டாக்டர்', 'எதற்கும் துணிந்தவன்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

 

இந்நிலையில் வினைக்கும் பிரபல நடிகை விமலா ராமனுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.சமீபகாலமாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை விமலா ராமன் பாலசந்தர் இயக்கத்தில் 2006-ஆம் ஆண்டு வெளியான 'பொய்' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். பின்பு சேரன் நடிப்பில் வெளியான 'ராமன் தேடிய சீதை' படத்தில் நடித்தார். இவர்களின் திருமணம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

 

 

Next Story

"இனி பொம்பள பிள்ளைகள அழ வைக்கக்கூடாது" - கவனம் ஈர்க்கும் சூரியின் பதிவு

Published on 11/03/2022 | Edited on 11/03/2022

 

actor soori tweet about Etharkkum Thunindhavan

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘எதற்கும் துணிந்தவன்’ படம் நேற்று (10.3.2022) திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார், சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து சூர்யாவின் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். படத்தை பார்த்த பலரும் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளை கூறியுள்ளதாக பாராட்டி வருகின்றனர்.

 

அந்தவகையில் நடிகர் சூரி படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், " இன்றைய காலச்சூழலுக்கு, மிகவும் தேவையான கருத்துள்ள, தாய்மார்கள் கொண்டாடும் படத்தை தந்தமைக்கு அண்ணன் பாண்டிராஜுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். ஆம்பள பிள்ளைக அழகூடாதுன்னு மட்டும் சொல்லி வளர்த்தவுக , இனி பொம்பள பிள்ளைகள அழ வைக்க கூடாதுன்னு சொல்லி வளர்ப்பாங்க" எனக் குறிப்பிட்டுள்ளார்.