Skip to main content

நீங்க கட்சி ஆரம்பிங்க... வேண்டாம்னு சொல்லல... கமல் மீது சுரேஷ் காமாட்சி பாய்ச்சல்! 

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
suresh kamatchi

 

உலகநாயகன் கமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்த ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன் தயாரிப்பில் 19வது படமாக உருவாகியிருக்கும் படம் 'மரகதக்காடு'. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். மங்களேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளரும், இயக்குனருமான சுரேஷ் காமாட்சி பேசியபோது.... "ராஜராஜன் சிலை தஞ்சைக்கு மீண்டும் வந்ததில் இருந்து. காவிரி நீராகட்டும், இப்போது ஏழு பேர் விடுதலை குறித்து பேசியிருப்பதாகட்டும் நல்ல விஷயங்களாக நடக்கின்ற்ன தமிழக அரசுக்கும் டி.ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கமர்ஷியலாக படம் எடுத்து சம்பாதித்து விட்டு போக நினைக்காமல் சமூக நோக்கிலான படங்களை மட்டுமே எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர் ரகுநாதனை பாராட்ட வேண்டும்.

 

 

  

தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலை தனது படத்தில் அறிமுகப்படுத்திய பெரும் பாக்கியம் பெற்றவர் ரகுநாதன். இன்று தமிழ் திரையுலகிற்கு கமல் சார் இவ்வளவு பெருமை சேர்த்துள்ளார் என்றால் அதில் முக்கிய பங்கு தயாரிப்பாளர் ரகுநாதனுக்கும் உண்டு. எனக்கு கமல் சார் மீது ரொம்பநாளாகவே, இப்போதுவரைக்கும் ஒரு வருத்தம் உண்டு. இந்த மரக்கதக்காடு குழுவினர் இந்தப்படத்தை தயார்செய்துவிட்டு இதன் பர்ஸ்ட்லுக்கை வெளியிடுவதற்காக கமல் சாரை தொடர்புகொண்டனர். தயாரிப்பாளர் ரகுநாதன் கமல் சாரை சந்திக்க இரண்டுமுறை நேரம் கேட்டும் கமல் தரப்பில் இருந்து கடைசி வரை பதிலே வரவில்லை. பதில் வரவில்லையா இல்லை இந்த தகவலே அவருக்கு சென்று சேரவில்லையா என தெரியவில்லை. நான் அவரது ரசிகன் என்கிற முறையில் சொல்கிறேன் உண்மையிலேயே நீங்கள் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்க நினைத்தீர்கள் என்றால் உங்களை அறிமுகப்படுத்திய ஒரு தயாரிப்பாளர் இவ்வளவு நாட்களாக படம் எடுக்காமல் இருந்து இன்று சமூக மாற்றத்திற்காக ஒரு படம் எடுத்திருக்கிறார் என்றால் அவரை பாராட்ட வேண்டிய கடமை உங்களுக்கு நிறைய இருக்கிறது. நீங்கள் கட்சி ஆரம்பிங்க...மக்களுக்கு நல்லது செய்யுங்க...வேண்டாம் என சொல்லவில்லை. அதற்கு முன்னால் உங்கள் கூட இருப்பவர்களுக்கும், உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது செய்யவேண்டும். அதன்பின் மற்றவர்களுக்கு நல்லது செய்யலாம். உண்மையில் ரகுநாதனை நீங்கள் பாராட்டினால் தமிழ் சினிமாவே பாராட்டிய மாதிரி" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அந்த குடிகாரனை வெட்டி எறிந்துவிட்டேன்' - பிரபல நடிகை புலம்பல் 

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

பிக்பாஸ் மற்றும் நாகினி தொடரில் நடித்து பிரபலமான ஹிந்தி நடிகை ஸ்வேதா திவாரி முதல் கணவர் ராஜா சவுத்திரியை விவாகரத்து செய்து பிரிந்த பிறகு நடிகர் அபினவ் கோலியை காதலித்து 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் தன் இரண்டாவது கணவருடனும் தற்போது ஸ்வேதாவிற்கு மோதல் ஏற்பட்டுள்ளது.

 

sweta tiwari

 

 

அபினவ் கோலி மது போதையில் தினமும் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக ஸ்வேதா திவாரி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் அவரை கைது செய்த நிலையில் நடிகை ஸ்வேதா திவாரி சமீபத்தில் அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசியபோது... ''கணவரை பிரிந்த பிறகு தற்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். எனது வாழ்க்கை ஒரு குடிகார விஷக்கிருமியிடம் சிக்கி இருந்தது. அந்த குடிகார விஷக்கிருமி என்னை கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்தது. இப்போது குடிகார விஷக்கிருமியை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எறிந்து விட்டேன். பெண்கள் தங்கள் பிரச்சினையை வெளியே சொல்ல பயப்படக்கூடாது'' என்றார்.

 

Next Story

பிக் பாஸ் வீட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அறை கொடுத்தது சரியா? - மனநல மருத்துவர் ஷாலினி பதில்

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய இரண்டு சீசன்களிலும் கலந்துகொண்டவர்கள் அதற்கு பிறகு புது அடையாளங்களை பெருகின்ற அளவுக்கு பிக் பாஸ் அவர்களின் வாழ்க்கையை மாற்றியிருந்தது. அதேபோல், தற்போது நடந்துவரும் பிக் பாஸ் 3வது சீசன் முந்தைய சீசன்களைவிடவும் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டுவருகிறது. இன்நிலையில் பிக் பாஸ் 3-யின் போட்டியாளர்கள் குறித்தும், அவர்களின் செயலுக்கான விளைவு குறித்தும் மனநல மருத்துவர் ஷாலினியுடன் நடந்த உரையாடலின் தொகுப்பு.

 

Dr.shalini about big boss

 

முந்தைய சீசன்களில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஆண்கள் படுக்கையறை, பெண்கள் படுக்கையறை என்று பிரித்துவைத்திருப்பார்கள். தற்போது அப்படி பிரிக்காமல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அறை கொடுக்கப்பட்டுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்? இது ஒரு கலாச்சார சீர்கேடு இல்லையா?
 

இது கலாச்சார சீர்கேடு என்று சொல்லமுடியாது. எப்போதும் கலாச்சாரம் சிறப்பான நிலையில் இருந்ததாக நான் நம்பவில்லை. அது தொடந்து சீர்கேட்டில்தான் இருக்கிறது. சீர்கேடுகளும் கலாச்சாரத்தின் ஒரு பகுதிதான். ஆனால், இவ்வளவு கீழ்த்தரமாக அவர்கள் இறங்கவேண்டுமா? வியூவர் ஷிப்பை அதிகப்படுத்துவதாக நினைத்து அதை செய்கிறார்கள். அங்கு எந்த அசம்பாவிதமும் நடக்கப்போவதில்லை. ஆனால், இது பேசுபொருளாக மாறும் என்பதற்காக ஒரே அறையை கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் இவ்வளவு அல்பத்தனமாக செய்திருக்கவேண்டாம் என்று தோன்றுகிறது.
 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் எல்லோரும் நடிகர்கள். அவர்களுக்கு கேமரா இருப்பது தெரியும். ஆனால், கமல் கூறும்போது, அவர்கள் கேமரா இருப்பதை மறந்துவருகிறார்கள் என்கிறார். அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? 
 

கண்டிப்பாக கேமரா இருப்பதை அவர்களால் மறக்கமுடியாது. வெளியில் வந்தபிறகும் எல்லா இடங்களிலும் கேமரா இருப்பதாகவே அவர்கள் பயப்படுகிறார்கள். அதிலிருந்து அவர்களை மீட்க நாங்கள் நிறைய போராடவேண்டியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி அதில் பங்கேற்பவர்களுக்கு மனதளவில் மிகுந்த பாதிப்புகளைக் கொடுக்கிறது. அது கமலுக்கும் தெரிந்திருக்கும். இருந்தும் அவரது சுயலாபத்திற்காக பொய் சொல்கிறார். 
 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்களின் ஆடைகள் குறித்தும் பல சர்ச்சைகள் எழுகின்றன. அப்படி உடை அணிவது அவர்களின் உரிமை, சமத்துவம் என்று எடுத்துக்கொள்ளலாமா? 
 

சிலருக்கு ‘எக்ஸ்டாப்லிஷ் டெண்டன்சி’எனப்படும்  என்னைப்பார், என் அழகைப்பார் என்று தன்னை அதிகமாக வெளிக்காட்டிக்கொள்ளும் மன நோய் இருக்கும். இந்த நோய் இருக்கும் ஆண்கள் பெண்களின் முன் தன் ஆடைகளை கழற்றிவிட்டு என்னைப்பார்த்தாயா நான் எவ்வளவு பெரிய ஆண் என்று கேட்பார்கள். அந்த மாதிரியான நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை, ஆபாசமாக உடையணியும் பெண்களுக்கும் கொடுக்கப்படவேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளவர்களுக்கு எல்லோரும் இதைப் பார்க்கிறார்கள், இதனால் என்ன விளைவு நடக்கும் என்று தெரியும், அந்த விளைவை தூண்டுவதற்காகவே அவர்கள் இப்படி உடையணிகிறார்கள். 
 

மதுமிதா நான் தமிழ் பெண், எனக்கு இதெல்லாம் ஒத்துவராது என்று கூறும்போது, “தமிழ்பொண்ணா இருந்தா ஏன் நடிக்கவர”என்று கேட்கிறார்கள். இது சரிதான?
 

ஏன் தமிழ்பெண் நடிக்க கூடாதா? அவர்களுக்கு நடிப்பு வராதா? சினிமா என்றால் வேறெதற்காகவோ என்று நினைத்துக்கொண்டு அவர்கள் அப்படி பேசியிருக்கிறார்கள். அதற்கு சினிமா காரர்கள்தான் எங்களை எப்படி இழிவாக பேசலாம் என்று சண்டைப்போட வேண்டும். நான் ரொம்ப பெரிய பணக்காரன் என்பதற்காக ஒரு ஆண் நிறைய நகைகளை போட்டுக்கொண்டு வந்தால், உன்கிட்ட பணம் இருந்தால் அதை இப்படி காட்டிகொள்ளவேண்டுமா என்று கேட்பார்களோ, அப்படித்தான் நான் ஒரு பேரழகி, மிக வனப்பான உடலைக் கொண்டவள் என்று காட்டிக்கொள்வதும் சீப்பான விஷயம் தானே. எல்லா பெண்களிடமும் இருப்பது தானே இவர்களிடமும் இருக்கிறது, அதைப்போய் அல்பமாக வெளிப்படுத்தவேண்டுமா?