ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த 'மாநாடு' படத் தயாரிப்பாளர்!

simbu

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாநாடு'. இப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இப்படத்திற்கு, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஏற்கனவே வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="a8dc242a-2f22-447a-861c-f2d5caa2784f" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside_21.png" />

தற்போது, இறுதிக்கட்டபடப்பிடிப்பில் படக்குழு கவனம் செலுத்திவருகிறது. மாநாடு படத்தின் கூடுதல் அப்டேட் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பி வந்த நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வண்ணம் ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார்.

அதில், "சிறந்த படத்தை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்க எங்கள் குழு கடுமையாக உழைத்துவருகிறது. ஒவ்வொரு கட்டமாகப் படத்திற்கான அப்டேட் அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். ஆதலால், கொஞ்சம் பொறுமை காக்கவும். விரைவில் உங்களுக்கு அப்டேட் கொடுக்க நாங்கள் விரும்புகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

maanaadu Simbu
இதையும் படியுங்கள்
Subscribe