Advertisment

"மாநாடு படம் சிம்புக்கு ஒரு மைல்கல்" - படம் பார்த்த பின் சுரேஷ் காமாட்சி பாராட்டு!

kvjujv

'ஈஸ்வரன்' படத்துக்கு பிறகு நடிகர் சிம்பு நடித்து வரும் படம் 'மாநாடு'. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். நீண்ட இழுபறிக்குப் பிறகு தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அதேபோல் தற்போது நடந்து வரும் இறுதிக்கட்ட படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இயக்குநர் வெங்கட் பிரபு சமீபத்தில் சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.

Advertisment

அந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்ற நிலையில், தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படப்பிடிப்பு தளத்தில் வெங்கட் பிரபு மற்றும் சிம்புவிடம் உரையாடும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில்... "நான் பார்த்தவரைக்கும் ‘மாநாடு’ படம் சிலம்பரசனுக்கும், வெங்கட் பிரபுவுக்கும் ஒரு மைல்கல்லாக அமையும். உடன் பணிபுரிந்த நடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்" என படக்குழுவினரைப்பாராட்டியுள்ளார்.

Advertisment

manadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe