ஃபெப்சி தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கிய சிம்பு படத் தயாரிப்பாளர்!

கரோனா வைரஸ் தொற்று உலகையே நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸானது தற்போது உலகம் முழுக்க 210 நாடுகளில் பரவியுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது.

fsf

இதேபோல் சினிமாத்துறையில் பணியாற்றும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப் பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். இந்நிலையில் ஃபெப்சி தொழிளாளர்களின் குடும்பங்கள் இந்த வேலையில்லாத நாட்களைக் கடந்து வர சிறு உதவியாக 50 அரிசி மூட்டைகளை (25 கிலோ) சிம்புவின் 'மாநாடு' படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வழங்கியுள்ளார்.

maanaadu manadu Simbu suresh kamatchi
இதையும் படியுங்கள்
Subscribe