Skip to main content

இரட்டை குழந்தைகளுக்கு தாயான சன்னி லியோன்

Published on 05/03/2018 | Edited on 05/03/2018

sunny


தனது கவர்ச்சியான நடிப்பால் உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் சன்னி லியோன் சில ஆண்டுகளுக்கு முன் பாலிவுட் திரையுலகில் தடம் பதித்து வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு வெளிவந்த லைலா மை லைலா பாடல் வரை அவருக்கென்று பாலிவுட்டில் தனி இடத்தை உருவாக்கி பலரது தூக்கத்தை கெடுத்து தன்நிகரில்லாத  கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சன்னி லியோன், டேனியல் வெப்பர் தம்பதியருக்கு குழந்தைகள் பிறக்காததால் கடந்த ஆண்டு இவர்கள் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இருந்தும் மரபியல் வழியாக தங்களுக்கென்று வாரிசு இல்லையே என்ற ஏக்கம் சன்னி லியோனின் மனதில் குடிகொண்டிருந்த நிலையில் அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் சன்னி லியோனின் கரு முட்டையும், டேனியல் வெப்பரின் விந்தணுவும் மருத்துவ ரீதியாக செயற்கை முறையில் செறிவூட்டப்பட்டு வாடகைத்தாயின் மூலமாக  பிரசவம் நடந்தது. இதில் ஒரு குழந்தைக்கு ஏங்கிய சன்னி லியோன் தம்பதியருக்கு ஒரே நேரத்தில் இரட்டை குழந்தைகளை அந்த வாடகை தாய் பெற்றெடுத்து தந்தார். மேலும் அவை இரண்டுமே ஆண் குழந்தைகள் என்பதால் சன்னி லியோன் தம்பதியர் இரட்டை பூரிப்பிலும், மகிழ்ச்சியிலும் திளைத்துள்ளனர். பின்னர் அந்த குழந்தைகைகளுக்கு ஆஷெர் சிங் வெப்பர் மற்றும் நோவா சிங் வெப்பர் என்று பெயர் சூட்டியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

சன்னிலியோனை புகழ்ந்தால் 10 சதவிகிதம் ஆஃபர்... இப்படியும் ஒரு சிக்கன் கடை!

Published on 16/04/2022 | Edited on 16/04/2022

 

SHOP

 

ஒரு ரூபாய்க்கு ஒரு பிரியாணி, தலைக்கவசம் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என இப்படி எத்தனையோ ஆஃபர்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பிரபல நடிகை சன்னிலியோனின் ரசிகராக அவரைப் புகழ்ந்தால் 10 சதவிகிதம் ஆஃபர் என்ற வினோத யுத்தியைக் கடைபிடித்து வருகிறது ஒரு சிக்கன் கடை.

 

SHOP

 

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ளது இந்த விநோத சிக்கன் கடை. மாண்டியாவில் பிரசாத் என்ற இளைஞர் வைத்திருக்கும் சிக்கன் கடையில் வாங்கும் சிக்கனுக்கு 10 சதவிகிதம் ஆஃபர் வேண்டுமென்றால் ஆஃபரை பெறும் வாடிக்கையாளர் தீவிர சன்னிலியோனின் ரசிகராக இருக்க வேண்டும். அப்படி கடைக்கு ஆஃபர் கேட்டு வரும் வாடிக்கையாளர் உண்மையிலேயே சன்னிலியோனின் ரசிகர்தானா என உறுதிப்படுத்த சில நிபந்தனைகளையும் அவரே விளம்பர பலகையில் வைத்துள்ளார். அதன்படி, 10 சதவீதம் ஆஃபர் கேட்டு வரும் வாடிக்கையாளர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் சன்னிலியோனை பின்தொடர வேண்டும். மொபைல் போனில் குறைந்தபட்சம் 10 சன்னிலியோன் புகைப்படங்கள் வைத்திருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே இந்த ஆஃபர் கிடைக்குமாம்.

 

இது தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் 'என்னத்த சொல்ல இப்படியும் ஒரு சிக்கன் கடையா?' என கமெண்ட் அடித்து வருகின்றனர் இணையவாசிகள்.

 

 

Next Story

பாஜக அமைச்சரின் எச்சரிக்கைக்கு பணிந்த சரிகம நிறுவனம்!

Published on 27/12/2021 | Edited on 27/12/2021

 

mp minister narottam mishra warning to madhuban song

 

பாலிவுட் சினிமாவில்  முன்னணி நடிகையாக இருக்கும் சன்னி லியோன் சமீபத்தில் 'மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே' என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார். சரிகம நிறுவனம் வெளியிட்ட இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இருப்பினும் சன்னி லியோன் நடனமாடிய இப்பாடல் இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக கூறி பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். 

 

அந்த வகையில் மத்தியப்பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா இப்பாடலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மூன்று நாட்களுக்குள் இப்பாடலை நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். 

 

இந்நிலையில் சரிகம நிறுவனம் மூன்று நாட்களில் இப்பாடலின் வரிகளும், பெயரும் மாற்றப்படும் என உறுதியளித்துள்ளது. கடந்த 22 ஆம் தேதி யூடியூப் தளத்தில் வெளியான இப்பாடல் 11 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.