Skip to main content

"என்னோட பெரிய பெருமை லோகேஷ் கனகராஜ்.. ஆனால், யுனிவர்ஸ் கொடுத்த பெரிய கிஃப்ட் இவரு.." - சந்தீப் கிஷன்

Published on 31/01/2023 | Edited on 31/01/2023

 

Sundeep Kishan spech at Michael movie Press Meet

 

லோகேஷ் கனகராஜ் வழங்க 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் 'மைக்கேல்'. இப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள இப்படம் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தியது படக்குழு. இதில் நடிகை ரெஜினா, சந்தீப் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர். 

 

நடிகர் சந்தீப் கிஷன் பேசுகையில், "என்னுடைய படத்தில் இந்த படத்திற்கு தான் ரிலீசுக்கு முன்பு ஒரு சிறிய எதிர்பார்ப்பு இருக்கிறது. மொழி தாண்டி இந்த படத்தில் சிறப்பான நடிப்பைக் கதாநாயகி வழங்கியுள்ளார். கௌதம் மேனனுடன் 'வாரணம் ஆயிரம்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன். இப்போது அவருடன் இணைந்து திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. விஜய் சேதுபதி பிஸியான நேரத்தில் இந்த படத்தில் நடித்துக் கொடுத்தார். நட்புக்காக லோகேஷ் இந்த படத்திற்குள் வந்தார். படம் அவருக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. என்னுடைய மிகப்பெரிய பெருமை லோகேஷ் கனகராஜ். அதே போல் யுனிவர்ஸ் கொடுத்த பெரிய கிஃப்ட் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி. 

 

இசையமைப்பாளர் சாம் சி. எஸ் பேசுகையில், "ரஞ்சித், லோகேஷ் போன்ற இயக்குநர்களுடன் பயணிக்கும் போது  எனக்கு சுதந்திரம் அதிகமாகக் கிடைக்கிறது. நிறைய புது விஷயங்களைச் செய்ய முடிகிறது. இந்த படம் எமோஷனை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம். இந்த படத்தில் அம்மா சென்டிமென்ட் ஆழமாக இருக்கிறது. ரஞ்சித் உடைய அனைத்து படத்திலும் எமோஷன் இருக்கிறது. உலகின் சிறந்த படங்கள் அனைத்திலும் எமோஷன் இருக்கும்" என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

14 வருடங்கள் நிறைவு செய்தது குறித்து சந்தீப் கிஷன்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
sundeep kishen about his complete 14 years in cinema

தெலுங்கில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர் 'சந்தீப் கிஷன்'. தமிழில் 'யாருடா மகேஷ்' படத்தில் அறிமுகமாகி 'மாநகரம்' படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'மாயவன்', கசடதபற ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் தனுஷ் நடிப்பில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான கேப்டன் மில்லர் படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாக தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் படத்தில் நடித்திருக்கிறார். தனுஷிற்கு தம்பி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிரது. இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. 

இந்த நிலையில் இவர் நடித்த முதல் படமான பிரஸ்தானம் என்ற தெலுங்கு படம் இன்றுடன் வெளியாகி 14 ஆண்டுகளைக் கடக்கிறது. இதன் மூலம் திரைத்துறைக்கு அவர் அறிமுகமாகி 14 ஆண்டுகளை நிறைவுசெய்கிறார். இந்த நிலையில் 14 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்து பகிர்ந்துள்ளார். 

இது தொடர்பாக அவரின் எக்ஸ் தள பதிவில், “இந்த 14 வருடங்களாக நண்பர்களாக, குடும்பமாக மற்றும் ரசிகர்களாக என்னுடன் அன்புடனும், வலிமையுடனும் இருந்ததற்கு நன்றி. நான் விழும்போதெல்லாம், நீங்கள் என்னை மீண்டும் மேலே எழச்செய்தீர்கள். நான் உங்களுக்கு என் வாழ்நாளில் கடமைப்பட்டிருக்கிறேன், மற்றும் உங்கள் அனைவரையும் மிகவும் பெருமைப்படுத்துவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

ரஜினி படத்தில் இணையும் ஸ்ருதிஹாசன்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
shrtthi hassan to join rajini 171

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோ, வருகின்ற 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் அந்த போஸ்டரில் ரஜினி வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். மேலும் கையில் கடிகாரத்தை விலங்காக கட்டியிருந்தார். இதை வைத்து ஏகப்பட்ட கதைகள் ரசிகர்களால் யூகிக்கப்பட்டது.

இதையடுத்து இப்படத்தில் ஷோபனா நடிக்கவுள்ளதாகவும், அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன், கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான பிரபாஸின் சலார் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து, 'தி ஐ' (The Eye), ஹாலிவுட் படத்தை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவரது இசையில் இனிமேல் ஆல்பம் சமீபத்தில் வெளியானது. இதில் ஸ்ருதிஹாசனும் லோகேஷும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.