Advertisment

‘நான் நடிப்பதையே விட்டுவிடுகிறேன்’- சவால்விட்ட நடிகர் சந்தீப் கிஷன்...

தெலுங்கு படத்தில் மிக பிரபலமான நடிகர் சந்தீப் கிஷன். இவர் ‘யாரு டா மகேஷ்?’ என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். அதன் பின் பல வருடங்கள் கழித்து தமிழில் மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமாகினார். இவர் தற்போது கார்த்திக் ராஜூ இயக்கத்தில் கண்ணாடி என்ற படத்தில் நடித்துள்ளார்.

Advertisment

sundeep kishan

அன்யா சிங், கருணாகரன், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. தெலுங்கிலும் இப்படம் தனியாக எடுக்கப்பட்டுள்ளது. வி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற ஜூலை 12ஆம் தேதி வெளியாகிறது.

Advertisment

இதனை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அதில் இசையமைப்பாளர் தமன், ஆனந்த்ராஜ், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட சிலரைத் தவிர படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய சந்தீப் கிஷன், “இப்போது வரும் பெரும்பாலான படங்களில் ஒரு பேய் அல்லது ஒரு நாய் இருக்கிறது. இது இரண்டிலுமே நடிக்கக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். யாருமே அடல்ட் காமெடி படம் பண்ணாமல் இருந்தபோது நான் ‘யாருடா மகேஷ்’ படத்தில் நடித்தேன். இப்போது எல்லாரும் அதில் நடிக்கும்போது நான் பண்ணமாட்டேன் என்றேன். அதேபோல இப்போது பேய்ப்படம் நடிக்க மாட்டேன் என்கிறேன். ஆனால, இது பேய்ப்படம் இல்லை. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு யாராவது இதை பேய்ப்படம் தான் என்று சொல்லிவிட்டால் நான் நடிப்பதையே விட்டு விடுகிறேன்” என்று கூறினார்.

kannadi sundeep kishan vijaysethupathi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe