Skip to main content

‘நான் நடிப்பதையே விட்டுவிடுகிறேன்’- சவால்விட்ட நடிகர் சந்தீப் கிஷன்...

Published on 03/07/2019 | Edited on 03/07/2019

தெலுங்கு படத்தில் மிக பிரபலமான நடிகர் சந்தீப் கிஷன். இவர் ‘யாரு டா மகேஷ்?’ என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். அதன் பின் பல வருடங்கள் கழித்து தமிழில் மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமாகினார். இவர் தற்போது கார்த்திக் ராஜூ இயக்கத்தில் கண்ணாடி என்ற படத்தில் நடித்துள்ளார். 
 

sundeep kishan

 

 

அன்யா சிங், கருணாகரன், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. தெலுங்கிலும் இப்படம் தனியாக எடுக்கப்பட்டுள்ளது. வி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற ஜூலை 12ஆம் தேதி வெளியாகிறது.
 

இதனை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அதில் இசையமைப்பாளர் தமன், ஆனந்த்ராஜ், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட சிலரைத் தவிர படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
 

அப்போது பேசிய சந்தீப் கிஷன், “இப்போது வரும் பெரும்பாலான படங்களில் ஒரு பேய் அல்லது ஒரு நாய் இருக்கிறது. இது இரண்டிலுமே நடிக்கக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். யாருமே அடல்ட் காமெடி படம் பண்ணாமல் இருந்தபோது நான் ‘யாருடா மகேஷ்’ படத்தில் நடித்தேன். இப்போது எல்லாரும் அதில் நடிக்கும்போது நான் பண்ணமாட்டேன் என்றேன். அதேபோல இப்போது பேய்ப்படம் நடிக்க மாட்டேன் என்கிறேன். ஆனால, இது பேய்ப்படம் இல்லை. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு யாராவது இதை பேய்ப்படம் தான் என்று சொல்லிவிட்டால் நான் நடிப்பதையே விட்டு விடுகிறேன்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

14 வருடங்கள் நிறைவு செய்தது குறித்து சந்தீப் கிஷன்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
sundeep kishen about his complete 14 years in cinema

தெலுங்கில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர் 'சந்தீப் கிஷன்'. தமிழில் 'யாருடா மகேஷ்' படத்தில் அறிமுகமாகி 'மாநகரம்' படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'மாயவன்', கசடதபற ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் தனுஷ் நடிப்பில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான கேப்டன் மில்லர் படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாக தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் படத்தில் நடித்திருக்கிறார். தனுஷிற்கு தம்பி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிரது. இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. 

இந்த நிலையில் இவர் நடித்த முதல் படமான பிரஸ்தானம் என்ற தெலுங்கு படம் இன்றுடன் வெளியாகி 14 ஆண்டுகளைக் கடக்கிறது. இதன் மூலம் திரைத்துறைக்கு அவர் அறிமுகமாகி 14 ஆண்டுகளை நிறைவுசெய்கிறார். இந்த நிலையில் 14 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்து பகிர்ந்துள்ளார். 

இது தொடர்பாக அவரின் எக்ஸ் தள பதிவில், “இந்த 14 வருடங்களாக நண்பர்களாக, குடும்பமாக மற்றும் ரசிகர்களாக என்னுடன் அன்புடனும், வலிமையுடனும் இருந்ததற்கு நன்றி. நான் விழும்போதெல்லாம், நீங்கள் என்னை மீண்டும் மேலே எழச்செய்தீர்கள். நான் உங்களுக்கு என் வாழ்நாளில் கடமைப்பட்டிருக்கிறேன், மற்றும் உங்கள் அனைவரையும் மிகவும் பெருமைப்படுத்துவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

கேங்கில் இணைந்த 2 நடிகர்கள் - ராயனாக தனுஷ்

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
dhanush 50 first look update title as raayan

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இதைத் தவிர்த்து ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். மேலும் ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். இப்போது சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இதில் தனுஷின் 50வது படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்ட மூன்று பேரும் இடம்பெற்றிருக்கின்றனர். மூன்று பேரும் கையில் ஆயுதங்களோடு கோபமாக நின்றுகொண்டிருக்கின்றனர். 

மேலும் ரத்தக் கறையோடு காணப்படுகின்றனர். இப்படத்திற்கு ‘ராயன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் 50வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. மேலும் தனுஷ் ரசிகர்கள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.