Advertisment

‘டிமானிடைசேஷன்’ மையமாக வைத்து உருவாகும் காமெடி படம்! 

sundar

Advertisment

இயக்குனர் சுந்தர்.சி-யின் தயாரிப்பு நிறுவனம் அவ்னி மூவீஸ். இந்நிறுவனம் இதுவரை 'ஹலோ நான் பேய் பேசுறேன்', 'முத்தின கத்திரிக்கா', 'மீசைய முறுக்கு', 'நட்பே துணை', 'நான் சிரித்தால்' உள்ளிட்ட ஐந்து படங்களை தயாரித்துள்ளது.

தற்போது 6வது திரைப்படத்தை தயாரிக்க லாக்டவுன் காலகட்டத்தில் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் விதிமுறைகளை ஏற்று இன்று படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது படக்குழு. படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சென்னையில் ஆரம்பமான படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும்.

மத்திய அரசு பண மதிப்பிழப்பு செய்தபோது பலரின் வாழ்க்கையில் மிகப்பெரிய விளைவுகள் ஏற்பட்டது. அப்படி பிரசன்னா, ஷாம் மற்றும் அஸ்வின் மூவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட விளைவுகளை நகைச்சுவையாக கூறுவதே இப்படத்தின் மையக்கரு என்று சொல்லப்படுகிறது.

Advertisment

இந்த படத்தில் பிரசன்னா, ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின், யோகிபாபு, விடிவி கணேஷ், ஆர்.என்.ஆர். மனோகர், ரித்திகா சென், மாஸ்டர் சக்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை 'வீராப்பு', 'தம்பிக்கு எந்த ஊரு' மற்றும் 'தில்லு முல்லு' ஆகிய படங்களை இயக்கிய பத்ரி இயக்கி வருகிறார். சத்யா இசையமைக்க, கிச்சா ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குநராக பிரேமும் மற்றும் நடன இயக்குநராக தினேஷும் பணியாற்றுகிறார்கள். தயாரிப்பு மேற்பார்வை பி.பாலகோபி. கன்னடத்தில் வெளியாகி செம ஹிட்டான மாயாபஜார் 2016 என்னும் படத்தின் தமிழ் ரீமேக் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பாக அரண்மனை 3 படத்தின் ஷூட்டிங்கை தொடங்கினார் சுந்தர்.சி ஆனால், லாக்டவுனால் ஷூட்டிங் முற்றிலும் முடங்கியது. மேலும், தற்போது ஷூட்டிங்கில் 75 பேர்தான் கலந்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகள் இருப்பதால் கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்த பிறகு அரண்மனை 3 படத்தின் ஷூட்டிங்கை தொடங்கலாம் என்னும் திட்டத்தில் உள்ளார் சுந்தர்.சி.

sundar c
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe