cvsafvsacv

சுந்தர் சி நடிப்பில் வெளியான 'இருட்டு' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்படத்துக்குப் பிறகு நீண்ட நாட்களாகப் படங்கள் எதிலும் நடிக்காமல் 'அரண்மனை 3' இயக்கி வந்த நடிகர் சுந்தர் சி, அடுத்ததாக மீண்டும் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். 'கட்டப்பாவ காணோம்' படத்தை இயக்கிய இயக்குனர் மணி செயோன் இப்படத்தை இயக்கவுள்ளார்.

Advertisment

வி.ஆர். டெல்லா ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக, வி.ஆர் மணிகண்டராமன் தயாரிக்கும் இப்படத்தில், நாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். க்ரைம் டிராமாவாக உருவாகும் இப்படத்தில் ஹெபா படேல், அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், முருகதாஸ், ராஜ்குமார், அஜித் கோஷி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மணி பெருமாள் ஒளிப்பதிவை மேற்கொள்ள சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.