Advertisment

ரகசியமாக அரண்மனை 3 ஷூட்டிங்கை தொடங்கிய சுந்தர்.சி!

மகாமுனி வெற்றியை தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் டெடி படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் ஆர்யா. இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் ரிலீஸுக்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

Advertisment

arya

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதனையடுத்து சுந்தர்.சி யின் அரண்மனை 3 படத்தில் ஆர்யா நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் சுந்தர்.சி ரகசியமாக இப்படத்தின் ஷூட்டிங்கை ராஜ்கோட் அரண்மனையில் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து 25 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த படபிடிப்பில் முக்கியமான காட்சிகளை ஷூட் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் மீதமுள்ள ஷூட்டிங்கை சென்னையில் பெரிய அரங்கு அமைத்து ஷூட் செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் ஆர்யா, யோகிபாபு, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர் என்று முன்னமே தகவல் வெளியானது.

இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றவுடன் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

sundar c Actor Arya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe