Advertisment

“அதை யார் முடித்து கொடுப்பது...” -நடிகை சுனைனா மறுப்பு! 

sunaina

டிவி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்தியா முழுவதும் பல மொழிகளில் நடைபெறும் நிகழ்ச்சியானது. தமிழில் இதுவரை மூன்றுமுறை நடைபெற்றுள்ளது. நான்காவது சீசன் கரோனாவால் தள்ளிப்போனது. வருகிற செப்டெம்பர் மாதத்திலிருந்து இந்நிகழ்ச்சியை தொடங்கி நவம்பரில் முடித்துவிட நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertisment

மேலும் இதில் போட்டியாளர்களாக நடிகைகள் அதுல்யா ரவி, சுனைனா, ரம்யா பாண்டியன் ஆகியோரின் பெயர் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்தன. இதனை தொடர்ந்து குறிப்பிட்ட நடிகைகளின் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

Advertisment

இந்நிலையில் பிக் பாஸ் 4வது சீசனில் பங்கேற்பதாக வந்த தகவலுக்கு நடிகை சுனைனா மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், “ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றால் என்னுடைய படங்களை யார் முடித்து கொடுப்பது என்று யோசிக்கிறேன். எப்போதும்எந்த ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியிலும்பங்குபெற விரும்பியதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

sunaina
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe