Skip to main content

படப்பிடிப்புக்கு முன்பே தொலைக்காட்சி கைப்பற்றிய சிவகார்த்திகேயன் படம் 

Published on 13/02/2018 | Edited on 13/02/2018
siva


நடிகர் சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்தை அடுத்து இரண்டு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படமும்,  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படமும் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் ரவிக்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியிருப்பதாக அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெறும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்