Advertisment

கார்த்தியின் சுல்தான் படம் என்ன ஆனது..? - எஸ்.ஆர் பிரபு விளக்கம்!

vegeg

Advertisment

ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில், நடிகர் கார்த்தி 'ரெமோ' படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் 'சுல்தான்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். கார்த்தியின் 19வது படமான இந்த படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல்லில் சுமார் 45 நாட்கள் படமாக்கப்பட்டது. இதன் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணாமாக அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு தற்போது ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில்...

''சுல்தான்' திரைப்படத்தின் 90% படப்பிடிப்பும் & முக்கிய எடிட்டிங் பணிகளும் முடிந்துவிட்டது. கோவிட்19 க்கு நடுவில் மீதம் இருக்கும் வேலைகளை முடிப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பார்த்து வருகிறோம். ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்புகளில் இது ஒரு மிகப்பெரிய முழுமையான பொழுதுபோக்கு படங்களில் ஒன்றாக இருக்கும். நீங்கள் அனைவரும் ஏற்கனவே அறிந்தபடி, இப்போதைக்கு பட வெளியீடு குறித்து எந்த திட்டமும் இல்லை!" என கூறியுள்ளார்.

actor karthi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe