Skip to main content

கரோனாவுக்காக விளம்பரத்தில் நடிக்கும் சுஹாசினி!

Published on 06/06/2020 | Edited on 06/06/2020

 

nfdjjdj


கரோனா விழிப்புணர்வுக்காக தமிழக அரசு விளம்பரப் படங்களைத் தயாரித்து தொலைக்காட்சிகளிலும் பல்வேறு ஊடகங்களிலும் வெளியிட்டு வருகிறது. அதில் சில முக்கிய விளம்பரங்களை இயக்கிவரும் 'கட்டில்' திரைப்பட இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு அதுபற்றி கூறியபோது...
 


''காவல் அரணாகச் செயல்பட்டு கரோனாவில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் களவீரர்கள் தங்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி சுஹாசினி அவர்களை வைத்து நான் இயக்கிய விளம்பரப்படம் இப்போது மக்களிடம் பரவலாகச் சென்றடைந்து வருகிறது. கமல்ஹாசன், மணிரத்னம் போன்ற இருபெரும் ஆளுமைகள் மத்தியில் வளர்ந்து, வாழ்ந்து, செயல்பட்டு வரும் சுஹாசினி அவர்கள் இந்த விளம்பரப் படத்தில் நடித்தபோது முழுமையாகத் தனது பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பெரிய திரைப்படமோ, சிறிய விளம்பரப்படமோ இரண்டுக்குமே சமமான அர்ப்பணிப்பைக் கொடுக்க வேண்டுமென்ற சுஹாசினி அவர்களின் ஈடுபாடு என்னை வியக்க வைத்தது. அரசின் உயர்நிலை அதிகாரிகள் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை இந்த விளம்பரத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் சில திரைப்பட ஹீரோக்கள், ஹீரோயின்கள், நகைச்சுவை நடிகர்களையும் வைத்து சில விளம்பரப் படங்களை நான் இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கிய தமிழக அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். செழியன் குமாரசாமி அவர்களின் தலைமை ஒருங்கிணைப்பில் இந்தப் படைப்புகள் மிகவும் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது" என்று 'கட்டில்' திரைப்பட இயக்குனரும் ஹீரோவுமான இ.வி.கணேஷ்பாபு கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

"அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார்" - சரத்பாபு மறைவு குறித்து சுஹாசினி விளக்கம்

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

suhasini about sarathbabu passed away

 

தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சரத்பாபு. இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய 'பட்டினப் பிரவேசம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.

 

சமீபத்தில் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. பின்பு அவர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இத்தகவலுக்கு விளக்கமளித்த அவரது குடும்பத்தினர் உடல்நிலை தேறி வருவதாகக் கூறினர். இந்நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு தற்போது உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. இவரது மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஜினிகாந்த், ராதிகா, சரத்குமார், சுஹாசினி, சுரேஷ் சந்த்ரா உள்ளிட்ட பிரபலங்கள் சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர். 

 

சரத்பாபுவின் உடல் தி.நகரில் இருந்து கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது. அந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். பின்பு கிண்டி மயானத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

 

இதனிடையே  சரத்பாபு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுஹாசினி, "கடந்த 92 நாட்களாக மருத்துவமனையில் இருந்தார். காய்ச்சல் காரணமாக முதலில் 2 மாதம் பெங்களூருவில் இருந்தார். அவரின் உறவினர்கள் அங்கு இருக்கிறார்கள் என்று அங்கு சென்றார். அந்த காய்ச்சல் குறித்து அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. 2 மாதத்திற்கு பிறகு தான் 'மல்டிபிள் மைலோமா' (Multiple Myeloma) என்ற நோய் இருந்தது தெரியவந்தது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

 

பின்பு ஒரு நாள் நானும் நடிகர் சிரஞ்சீவியும் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் பேசினோம். முடிந்தளவுக்கு காப்பாற்ற முயல்கிறோம் என நம்பிக்கை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று (22.05.2023) மதியம் 1.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவர் தமிழில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார். அவருக்கு எந்த விதமான கெட்ட பழக்கங்களும் கிடையாது. அப்படி ஆரோக்கியமாக இருந்தும் இந்த 'மல்டிபிள் மைலோமா' என்ற நோய் நான்காவது கட்டத்தை எட்டிய பிறகு தான் தெரியவந்துள்ளது. இதனால் தான் அவரை நாம் இழந்துவிட்டோம். இனிமேல் உடலை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது ரொம்ப முக்கியம்" என்றார். 'மல்டிபில் மைலோமா' என்ற நோய் அரிய வகை புற்றுநோய் எனச் சொல்லப்படுகிறது. 

 

 

Next Story

“மணிரத்னத்தையும் ஏமாற்றியிருப்பார்கள்” - சுஹாசினி பகிர்ந்த உண்மை சம்பவம்

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

Suhasini Speech about cyber crime

 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையத்தில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ், மகேஸ்வரி ஐபிஎஸ், நடிகை சுஹாசினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

 

அப்போது பேசிய சுஹாசினி, “8 வருடங்கள் முன்பு முக்கியமான ஒரு ப்ராஜெக்ட்டில் பணியாற்றி இருந்தோம். தினமும் ஒரு மேக்கிங் இருக்கும். செட்டுக்கு போனவுடனே பிசியாக அனைவரையும் வேலை வாங்கிக் கொண்டிருப்பேன். அப்போது எனக்கு 55 வயது இருக்கும். தினமும் காலையில் என் ஃபோனுக்கு மோசமான ஒரு புகைப்படம் வரும். அதைப் பார்த்தவுடன் கை கால்கள் எல்லாம் நடுங்கும். இது ஒருநாள் அல்ல தொடர்ந்து மூன்று மாதம் நடந்தது. அப்போது கமிஷ்னரிடம் இது குறித்து சொன்னேன். ரொம்ப வருத்தப்பட்டார். உடனே ஏன் சொல்லவில்லை என்று கேட்டார். வெளியில் சொல்வதற்கு எனக்கே பயமாக இருந்தது. ஆனால் 18 வயது உள்ள பெண்கள், புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு நடந்து அதை வெளியில் சொல்லியிருந்தால் அந்த பெண்ணை தான் முதலில் கேள்வி கேட்பார்கள். 

 

அண்மையில் என் கணவருக்கு மின் கட்டணம் கட்ட சொல்லி குறுஞ்செய்தி வந்தது. நல்ல வேளை அவர் எந்த லிங்க்கையும் தொடவில்லை. பின்பு வீடு, கெஸ்ட் ஹவுஸ் என எல்லா இடத்துக்கும் சரியாக மின் கட்டணம் கட்டியுள்ளதா என சரி பார்த்தோம். எல்லாமே கரெக்ட்டாக கட்டியிருந்தது. அதற்கு பிறகு தான் அது ஏமாற்று வேலை என்று தெரிந்தது. இல்லையென்றால் மணிரத்னத்தையும் ஏமாற்றியிருப்பார்கள். அதனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.