”பேரரசு சாரின் படங்களை வியப்புடன் பார்த்து ரசித்தேன்” - சுதா கொங்கரா பேச்சு

Sudha Kongara

இந்திய அரசின் 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த முறை தமிழ் சினிமாவிற்கு மொத்தம் 10 விருதுகள் கிடைத்துள்ள நிலையில், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் தேசிய விருது வென்ற கலைஞர்களுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு விருது வென்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

நிகழ்வில் இயக்குநர் சுதா கொங்கரா பேசுகையில், “இந்த மேடையில் நான் எது பேசினாலும் குறைவாகத்தான் இருக்கும். ரொம்பவும் அழகாக பேசக்கூடியவர்கள் இங்கு இருக்கிறார்கள். பேரரசு, ஆர்.கே.செல்வமணி, உதயகுமார், பார்த்திபன், வசந்த் சாரின் படங்களை நான் வியப்புடன் பார்த்து ரசித்திருக்கிறேன். அவர்கள் இருக்கும் இந்த மேடையில் நிற்பதையே நான் பெரிய விஷயமாகப் பார்க்கிறேன். எங்களை வந்து பாராட்டிய, மரியாதை அளித்த அனைவருக்கும் நன்றி" எனத் தெரிவித்தார்.

sudha kongara
இதையும் படியுங்கள்
Subscribe