Advertisment

உங்கள் ஆன்மாவுக்கு திருப்தி அளிக்கும் விஷயம் என்ன? - சுபிக்ஷா கேள்வி!

hrhdhd

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.

Advertisment

மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்குத் தடுப்பூசி மற்றும் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். மேலும் சில பிரபலங்கள் மக்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் செய்துவரும் நிலையில்,நடிகை சுபிக்ஷா கரோனா ஊரடங்கு காலத்தில் உணவு இல்லாமல் சிரமப்படுபவர்களுக்கு உணவு வழங்கினார். இதுகுறித்து சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என் ஆத்மா திருப்தி அடைய ஒரு சிறந்த விஷயம், ‘மற்றவர்களுக்கு உணவளித்தல் அல்லது தேவைப்படுபவர்களுக்கு உணவளித்தல்’. உங்கள் ஆன்மாவுக்கு திருப்தி அளிக்கும் விஷயம் என்ன?" என கூறியுள்ளார்.

Advertisment

subiksha
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe