Skip to main content

சிம்புவின் ஃபர்ஸ்ட் லவ்... - ஹரிஷ் கல்யாண் பகிரும் பெர்சனல் பக்கம்   

Published on 22/08/2018 | Edited on 22/08/2018

தமிழ் பிக்பாஸ்1 மூலம் பிரபலமான புதுமுகங்களில் மற்றவர்கள் அனைவரையும் ஓவர்டேக் பண்ணி ஒரு திரைப்படத்தில் நடித்து அதில் வெற்றியையும் பெற்றிருக்கிறது ஹரிஷ் கல்யாண் - ரைஸா வில்சன் ஜோடி. 'ப்யார் ப்ரேமா காதல்', யுவன் இசை தயாரிப்பில் இளைஞர்களின் படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஹரிஷ் கல்யாண், நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர், தம்பி போல என்றார்கள். அவரிடம் சிம்புவுடனான நட்பு, சிம்புவைப் பற்றிய சர்ச்சைகள் குறித்து பேசியபோது...
 

harish



" 'ப்யார் ப்ரேமா காதல்' படத்தின் டைட்டிலைக் கேட்ட போதே எனக்கு சிம்பு உருவாக்கிய 'லவ் ஆன்தம்' பாடல்தான் நினைவு வந்தது. அவரிடம் டைட்டிலை சொன்னேன். 'ஏதோ ஒரு விதத்தில் என் சம்பந்தமா உனக்கு ஏதோ நடக்குதுல?'னு சொன்னார். அவர் ஹாப்பிதான். அவர் குறித்த சர்ச்சைகளுக்கு சில நேரத்தில் 'எதுக்கு  இப்படி பண்றாங்கன்னு புரியல. அவங்களுக்கு என்ன வேணும்னு தெரில' அப்படினு சொல்லுவாரு. ஆனா பெரும்பாலும் 'இது எல்லாம் நிறைய பாத்தாச்சு, இதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்ல, என்ன இருந்தாலும் சிலம்பரசன் மக்கள் மனசில் இருப்பான்' அப்படினு சொல்லுவாரு. படத்தின் ஆடியோ லான்ச்ல சிம்புவின் ஃபர்ஸ்ட் லவ் யாருன்னு ஒருத்தர் கேட்டபோது 'என் ரசிகன்தான்'ன்னு சொன்னார். உண்மையாகவே அவர் ரசிகர் மேல 'ரெஸ்பெக்ட்' வச்சிருக்கார். நிறைய சர்ச்சையான விஷயங்கள் நடந்தப்போ அவங்க ரசிகர்கள் அவர் கூடவே நின்னாங்க. படம் வந்தாலும் வரலன்னாலும் அவர் கூடவே ரசிகர்கள் இருக்கிறது. ஒரு வியப்பான விஷயம்தான்" என்றார்.   

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பாகுபலி நடிகர்!

Published on 30/06/2021 | Edited on 30/06/2021
bnfxhshsh

 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமாகி வருகிறது. இதில் தெலுங்கு பிக்பாஸ் முதல் சீசனை ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனை நானி, மூன்று மற்றும் நான்காவது சீசன்களை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினர். இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது பிக்பாஸ் ஐந்தாவது சீசன் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

 

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கடந்த இரண்டு வருடங்களாகத் தொகுத்து வழங்கிய நடிகர் நாகர்ஜுனா, படங்களின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த வருடம் பிக்பாஸ் நிகஸ்ச்சியில் இருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்குப் பதிலாக 'பாகுபலி' புகழ் நடிகர் ராணா இதனை தொகுத்து வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

 

Next Story

"நம்புங்க... நானும் நல்லவன்தான்" - குறும்பு குறையாத பாலாஜி!

Published on 18/01/2021 | Edited on 18/01/2021
biggboss 4 balaji

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 க்ராண்ட் ஃபினாலே (இறுதிப் போட்டி நாள்) நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பப்பட்டது. வெற்றி பெறப்போவது யார் என்று மக்கள் ஆவலுடன் காத்திருந்து பார்த்தனர். ஆரி, பாலாஜி இருவருக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில் நீண்ட சஸ்பென்ஸுக்குப் பிறகு வெற்றி பெற்றது ஆரி என்று அறிவித்தார் கமல்ஹாசன். இறுதிப்போட்டி வரை நின்று இரண்டாம் இடத்தை பெற்றிருக்கிறார் பாலாஜி முருகதாஸ்.

 

உடலை கட்டுக்கோப்பாய் பராமரித்து வரும் பாலாஜி, பிக்பாஸுக்கு முன்பே சர்வதேச அளவிலான ஆணழகன் போட்டிகளில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார். அப்போது கிடைக்காத ஊடக வெளிச்சம் இந்தப் போட்டியில் கிடைத்தால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் இந்தப் போட்டியில் கலந்துகொள்வதாகக் கூறியிருந்தார். பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் பாலாஜி சற்று வித்தியாசமானவரும்  அதிரடியானவரும் ஆவார். ஆரம்பத்தில் இருந்தே அவரது வெளிப்படையான பேச்சும் அதிரடியான நடவடிக்கைகளும் பல பிரச்னைகளை உண்டாக்கின. சில நேரங்களில் உடைந்து கலங்கியும் இருக்கிறார்.

 

உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் பலவீனமானவராக பார்க்கப்பட்ட பாலாஜி, நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் டாஸ்க்களிலும் நடத்தப்படும் போட்டிகளிலும் சிறப்பான வியூகம் அமைத்து தொடர்ந்து விளையாடி வந்தார். பிறரிடம் அவர் நடந்துகொள்ளும் விதம் ஒரு பக்கம் விமர்சனங்களை பெற்று வந்தாலும் ஒரு சாராரிடம் வரவேற்பையும் பெற்றது. இவரது நடவடிக்கையை பார்த்து சில வாரங்களிலேயே வெளியேறிவிடுவார் என்று தான் நினைத்ததாக கமலே கூறியிருந்தார்.

 

இப்படியாக இறுதிச் சுற்று வரை வந்து இரண்டாம் இடம் பெற்ற பாலாஜி, மேடையில் பேசும்போது "நான் எனக்கு தோணுனதை எல்லாம் பேசியிருக்கேன், செஞ்சுருக்கேன். கொஞ்சம் கூட எதையும் மறைக்கல. இப்படி இருந்தா ஜெயிப்போம்னு நினைச்செல்லாம் பண்ணல. விளைவுகளை பற்றி கவலைப்படாம செஞ்சிருக்கேன். ஆனா, அப்படி செஞ்சதோட விளைவா நான் இறுதிப் போட்டிக்கு வருவேன்னு தெரிஞ்சிருந்தா இன்னும் நல்லாவே செஞ்சிருப்பேன்" என்று சிரித்துக்கொண்டே கூறினார். "ஆனா ஒன்னு... என்னை நம்புங்க, நானும் நல்லவன்தான்" என்று தனது குறும்பு மாறாமல் கலகலப்பாக முடித்தார்.