மின்சார கனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒளிப்பதிவாளர், இயக்குனர் ராஜீவ் மேனன் 18 வருடங்களுக்கு பிறகு இயக்கியுள்ள படம் 'சர்வம் தாள மயம்'. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவன் தடைகளை மீறி மேற்கொள்ளும் இசைப்பயணத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வரும் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு முன்னதாக அறிவித்தது. இதையடுத்து திடீரென்று படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் 'சர்வம் தாள மயம்' படத்தை பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "பீட்டரின் உலகை உலுக்கும் கேள்வி ஒன்றைக் கேட்கிறாள் சாரா. அந்தக் கேள்விக்கான விடையை பீட்டர் தேடும் பயணம் - சர்வம் தாளமயம். பிப்ரவரி 2019 முதல்" என்று குறிப்பிட்டுள்ளார்.