Skip to main content

"பாஜகவை ஆதரிக்கிறேனா.. அதை மக்கள் முடிவு செய்யட்டும்" - ராஜமௌலி பதில்

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

SS Rajamouli reacts to reports of him supporting BJP

 

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியிருந்தார் ராஜமௌலி. இப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு’ பாடலுக்காக சிறந்த பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது பெற்றார் இசையமைப்பாளர் கீரவாணி. இதையடுத்து 95வது ஆஸ்கர் விருதில் சிறந்த பாடல் (Original Song) பிரிவில் நாமினேஷன் லிஸ்டில் அந்த பாடல் இடம்பெற்றுள்ளது. வருகிற மார்ச் 12ஆம் தேதி ஆஸ்கர் விருது நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

 

இதனிடையே பாஜகவின் சித்தாந்தத்தை ஆதரிக்கும் வகையில் ராஜமௌலி படங்கள் இருப்பதாக விமர்சனம் எழுந்தது. தற்போது தி நியூ யார்கர் இணையதளத்திற்கு பேட்டி கொடுத்துள்ள ராஜமௌலி இந்த கேள்வி குறித்து பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், "முதலில் பாகுபலி திரைப்படங்கள் கற்பனையானவை. அதனால் என் படத்தின் கதாபாத்திரங்கள் பாஜகவின் சித்தாந்தத்தை தொடர்புபடுத்தி உள்ளது என்று கூறுவது பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. 

 

ஆர்.ஆர்.ஆர் படத்தை பொறுத்தவரை அது ஒரு ஆவணப்படமும் இல்லை. வரலாற்றுக் கதையும் இல்லை. வரலாற்றில் இருக்கும் இரண்டு கதாபாத்திரங்களைக் கொண்டு கற்பனையாக எழுதப்பட்டது. இது போல் கடந்த காலத்தில் நிறைய படங்கள் உருவாகியிருக்கின்றன. பாஜகவை ஆதரிப்பதாக என் மீது விமர்சனம் வைப்பவர்களுக்கு நான் கூறுவது, ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்ட போது முஸ்லீம் குல்லா அணிந்தது போல் வடிவமைத்திருந்தோம். கதைப்படி அவர் யார் என்பதை மறைத்து ஒரு இடத்திற்கு சென்றிருப்பார்.

 

இந்த போஸ்டரால் பாஜக தலைவர் ஒருவர் திரையரங்குகளை எரித்து விடுவதாக மிரட்டினார். மேலும், அந்த தொப்பியை அகற்றாவிட்டால் என்னை சாலையில் அடிப்பேன் என்று கூறினார். எனவே நான் பாஜகவை சேர்ந்தவனா இல்லையா என்பதை மக்கள் தாங்களாகவே முடிவு செய்து கொள்ளட்டும்" என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.