Skip to main content

கணவர் எப்படி இறந்தார் என்பதை உருக்கமுடன் வீடியோ வெளியிட்டுச் சொன்ன சின்னத்திரை நடிகை

Published on 04/08/2023 | Edited on 04/08/2023

 

sruthi shanmuga priya about his husband passed away

 

தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமான நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. கடந்த ஆண்டு அரவிந்த் சேகர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஒரு ஆண்டு கடந்து இருவரும் வாழ்ந்து வந்த நிலையில் நேற்று (03.08.2023) திடீரென்று அவரது கணவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 30. இந்த வயதில் மறைந்துள்ளதால் இவரது மரணம் குறித்துப் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வந்தன. இவர் மிஸ்டர் தமிழ்நாடு 2022 பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், கணவர் மரணம் குறித்து விளக்கம் அளித்து ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. அதில், "அரவிந்த்தோட இறப்புக்கு நிறைய பேர் ஃபோன் பண்ணி மெசேஜ் பண்ணி நிறைய சப்போர்ட் கொடுத்தீங்க. முதலில் அதற்கு நன்றி. என் கூடவே இருக்காரு... எப்பவுமே என்னை விட்டு போகமாட்டார். அதையெல்லாம் தாண்டி, இந்த கஷ்டமான நேரத்தில் கூட வீட்டில் இருக்கிற மற்ற வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு இப்ப வீடியோ வெளியிடுவதற்கான முக்கிய காரணம், யூட்யூப் சேனல்ஸ் தான். நிறைய சேனல்கள் என்ன நடக்கிறது என தெரியாமல் தேவையில்லாத விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள். உங்களுக்கு அப்படி தகவல்கள் தேவைப்பட்டால் நான் இப்போ பேசுறதை ஆதாரமாக எடுத்துக்கொள்ளுங்கள். 

 

தெரியாத விஷயங்கள் அது, இது என பரப்பி... அதனால் என் குடும்ப உறுப்பினர்கள் பயங்கர வருத்தமடைகிறார்கள். இதை எல்லா யூட்யூப் சேனல்ஸ்களுக்கும் நியூஸ் சேனல்ஸ்களுக்கும் கேட்டுக்கொள்கிறேன். மாரடைப்பால் அவர் இறந்துவிட்டார். அதை தாண்டி நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம். அதை தாண்டி அவர் ஒரு பாடி பில்டர், ட்ரையினர், ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும்போது இறந்துவிட்டார் என தவறான தகவல்களை சொல்கிறார்கள். அதெல்லாம் எதுவும் கிடையாது. அவர் ஒரு சிவில் இன்ஜினியர். உடல் ஃபிட்னஸில் அவருக்கு ஆர்வம் அதிகம் அவ்வளவுதான். அதைத் தாண்டி எதுவும் இல்லை. அதனால் தவறான தகவ்களை பரப்ப வேண்டாம் என கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். 

 

 

 

சார்ந்த செய்திகள்