Skip to main content

“அரசியல் காரணமாக சில்க் சுமிதாவை இழந்துவிட்டோம்”- ஸ்ரீரெட்டி வேதனை

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகர்கள் மீதும் தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், லாரன்ஸ், சுந்தர்.சி, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல்ரீதியாக பயன்படுத்திக்கொண்டனர் என்று புகார் தெரிவித்திருந்தார் ஸ்ரீரெட்டி. தற்போது இவர் மூன்று தமிழ் படங்களில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகின. அதனால் சென்னையில் வசித்து வருகிறார்.
 

sri reddy

 

 

தற்போது இவர் சில்க் சுமிதாவை பல முன்னணி ஹீரோக்கள் பயன்படுத்திக்கொண்டனர் என்று குற்றம்சாட்டியுள்ளார். 
 

“சில்க் சுமிதாவை முன்னணி கதாநாயகர்கள் உடல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர். அந்த சைக்கோக் களை எப்படி பட உலகின் சகாப்தம் என்று அழைக்க முடியும். சினிமா மற்றும் அரசியல் காரணமாக அவரை இழந்து விட்டோம். உங்களை மறக்கமாட்டோம் சில்க் சுமிதா” என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். எந்த நடிகர் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை.

 

சார்ந்த செய்திகள்

Next Story

போலீஸார் வழக்குப் பதிவு: விரைவில் கைது செய்யப்படுவாரா ஸ்ரீரெட்டி?

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

தெலுங்கு திரையுலகில் துணை நடிகையாக ஒருசில படங்களில் நடித்திருந்த நடிகை ஸ்ரீரெட்டி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பயன்படுத்திக்கொண்டனர் என்று புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் சமூக வலைதளங்களில் புகாரளித்த லிஸ்ட்டில் தெலுங்கு திரையுலகின் உட்ச நட்சத்திரங்களும் இருந்தது. அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார்.
 

sri reddy

 

 

சமீபத்தில் தெலுங்கு சினிமாவின் உட்சநட்சத்திரமான பவன் கல்யாண், மூன்று திருமணம் செய்தவர், இவரால் பல பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள், அரசியலுக்கு சரியானவர் இல்லை என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினார்.

இதுபோல் தெலுங்கு துணை நடிகை கராத்தே கல்யாணி, நடன இயக்குனர் ராகேஷ் ஆகியோர் மீதும் அவதூறு கூறினார். இதையடுத்து கராத்தே கல்யாணியும், ராகேசும் சைபர் கிரைம் போலீசில் ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்தனர். 

இதையடுத்து ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீரெட்டி விரைவில் கைது செய்யப்படலாம் என்று தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது. 


 

Next Story

“நீங்கள் கொடுக்கவுள்ள வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்”- வாய்ப்பு கேட்கும் ஸ்ரீரெட்டி

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், லாரன்ஸ், சுந்தர்.சி, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது புகார் கூறினார். தற்போது இவர் மூன்று தமிழ் படங்களில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகின. அதனால் சென்னையில் வசித்து வருகிறார்.
 

sri reddy


ராகவா லாரன்ஸ் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்திருந்தார். இதற்கு கடந்த ஜூலை மாதம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிலளித்த ராகவா லாரன்ஸ், “ஸ்ரீரெட்டி கூறுவது முற்றிலும் பொய். அவர் தவறு நடந்ததாக கூறப்படும் நேரத்தில் நான் தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் ரிபெல் படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். அத்திரைப்படம் வெளியாகி சுமார் 7 வருடங்களாகின்றன. இத்தனை நாட்களாக புகார் அளிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார். என்னை ஹோட்டல் அறையில் சந்திக்க வந்த போது ராகவேந்திரா சுவாமி படம் எல்லாம் வைத்திருந்ததாக கூறியுள்ளார். நான் என்ன முட்டாளா? ஹோட்டலின் படுக்கை அறையில் சுவாமி படத்தை வைக்க? எனக்கு ஸ்ரீரெட்டியை பார்த்தால் இப்போதும் கோபம் வரவில்லை. அவரது சமீபத்திய பேட்டிகளை பார்க்கும் போது அவரது நிலையை எண்ணி வருத்தமாக இருக்கிறது. நான் பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டுகிறேன். ஸ்ரீரெட்டி அங்கே வந்து நான் சொல்லும் காட்சிகளுக்கு நடிப்புத் திறனை நிரூபிக்கட்டும். சில நடன அசைவுகளை கற்றுத் தருகிறேன். அதன்படி நடனமாடி தனது திறமையை நிரூபிக்கட்டும். அப்படி நான் கடினமான நடன அசைவுகளை செய்து காட்டச்சொல்வேன் என்ற பயமெல்லாம் அவருக்கு வேண்டாம். அவர் மிக எளிதான நடன அசைவுகளை செய்து காட்டினால் போதும். அவர் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் அது போதும். அது தான் முக்கியம். ஒருவேளை பத்திரிகையாளர்கள் முன் நடித்துக்காட்ட தயங்கினால் அவரது வழக்கறிஞர்களை அழைத்து வந்து அவர்கள் முன்னிலையில் நான் வைக்கும் சோதனையில் தனது நடனத் திறமையை நிரூபித்தால் எனது அடுத்த திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்க நான் தயார் . இந்த அறிவிப்பை அவர் மீதுள்ள பயத்தால் நான் அறிவிக்கவில்லை. எனக்கு பெண்கள் மீதுள்ள மரியாதையால் சொல்கிறேன். இல்லாவிட்டால் என் அம்மாவுக்கு கோயில் கட்டினேன் என்ற பெருமையை இழந்தவனாகி விடுவேன்” என்று பதிவிட்டிருந்தார். 
 

devarattam


கடந்த வாரம் காஞ்சனா-3 வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ராகவா லாரன்ஸ் ஹிந்தியில் தற்போது காஞ்சனாவை ரீமேக் செய்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் ஸ்ரீரெட்டி காஞ்சனா 3 வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, “நீங்கள் கொடுக்கவுள்ள வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் மாஸ்டர். உங்களில் எத்தனை பேர் என்னை மாஸ்டர் படத்தில் பார்க்க விரும்புகிறீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.