Skip to main content

ஒரு மருத்துவருக்கு நாம் செலுத்தும் நன்றியா இது..? - ஸ்ரீப்ரியா வேதனை!

Published on 21/04/2020 | Edited on 21/04/2020

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனராக இருந்த 55 வயது மருத்துவர் சைமன், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இவர் ஏற்கனவே சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிஸ் சிகிச்சை பெற்று வந்ததாகவும், கரோனா தாக்கத்தால் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

tete

 

அதன்பிறகு மருத்துவரின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது. இந்தத் தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அவரது உடல் வேலங்காடு மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு காவல்துறையினரின் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேர் மீது, காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஊரடங்கை மீறுதல், தொற்று நோய் தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை கைது செய்தனர். 
 

nakkheeran app


கரோனா நோய் தொற்று எதிர்ப்பு போரில், முன் படைவரிசை வீரர்கள் எனப் போற்றப்படும் மருத்துவர்கள் மரணத்துக்கு மரியாதை தராமல் இதுபோன்ற செயலில் ஈடுபடும் சிலரால் மனிதாபிமானம் சிதைக்கப்படுவதாகத் தலைவர்கள் பலரும், மருத்துவர்கள், திரையுலகினர், மருத்துவச் சங்கத்தினரும் வேதனை தெரிவித்து வரும் நிலையில் சைமனின் இறுதிச் சடங்கு குறித்து நடிகை ஸ்ரீப்ரியா சமூகவலைத்தளத்தில் வேதனை தெரிவித்துள்ளார். அதில்...

"கரோனா மனித இனத்தையே மரண பயத்தில் ஒதுக்கி வைத்திருக்கும் தொற்று. இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் நேரங்களில் மனிதன் மாறுவான், மனிதத்தன்மை மேலோங்கும் என்று நினைப்போமேயானால், அது தவறோ என்று எண்ணும்படி எத்தனை சம்பவங்கள்? கள்ளச்சாராயம், ஊழல், மதத்தின் அடிப்படையில் மக்களை மதிப்பது. அத்தனையும் அமோகமாக நடந்து கொண்டிருப்பதாக செய்திகள். இவற்றை எல்லாம் பின்னுக்குத் தள்ளும் இந்த காணொலி, என் மனதை உலுக்கிவிட்டது. கை தட்டினால் மட்டும் போதுமா? நமக்காக சேவை செய்து மாண்ட ஒரு மருத்துவருக்கு நாம் செலுத்தும் நன்றியா இது?"

 

சார்ந்த செய்திகள்

Next Story

"இதுபோன்ற நடத்தையை யாருடனும் விவாதிப்பது சரியா? தவறா?..." - ஸ்ரீப்ரியா ஆதங்கம்!

Published on 27/05/2021 | Edited on 27/05/2021

 

vgsbsdbs

 

கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. தமிழகத்திலும் அதிகளவில் கரோனா பாதிப்பு இருந்துவருகிறது. இதனால், முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுத்துவருகின்றனர். இந்நிலையில், சென்னை கே.கே நகரில் அமைந்துள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகப் புகார்கள் அளித்துள்ளனர். இதையடுத்து அவர் தற்போது போலீசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கிறார்.

 

ஆசிரியரின் இந்தச் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், நடிகையும் மக்கள் நீதி மய்யத்தின் தலைமை பேச்சாளருமான ஸ்ரீபிரியா கண்டனம் தெரிவித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "மாணவர்களை துன்புறுத்தும் ஆசிரியர்... இதுபோன்ற நடத்தையை யாருடனும் விவாதிப்பது சரியா? அல்லது தவறா? என்று குழந்தைக்குத் தெரியாதபோது, அது பாதிக்கப்படக்கூடிய பெண் எந்தவகையில் பாதிக்கப்பட்டாலும், ஒவ்வொரு குழந்தையும் குறிப்பாக பெண்கள், ஏதோவொரு விதத்தில் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள். எனவே ஆசிரியரிடமிருந்து இதுபோன்ற பிரச்சினைகள் வரும்போது நாம் உடனடியாக அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

 

 

Next Story

இப்ப எதுக்கு வந்தீங்க? ஸ்ரீபிரியாவிடம் கேள்வி எழுப்பிய மக்கள்..! (படங்கள்)

Published on 03/04/2021 | Edited on 03/04/2021

 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் ஸ்ரீபிரியா, அத்தொகுதி முழுவதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் சென்னை சிட்டி சென்டர் எதிரில் வாக்கு சேகரித்த ஸ்ரீபிரியாவிடம், “கரோனா காலத்துல சாப்பாட்டுக்கே வழியில்லாம இருந்தோம். அப்பல்லாம் வராம இப்ப எதுக்கு வந்தீங்க?” என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர்.