இந்நிலையில் இந்த டைட்டில் வின்னர் குறித்து இந்த நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்தார் நடிகை ஸ்ரீபிரியா. அதில், “விஜய் டிவியில் நடக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இசையில் கைதேர்ந்தவர்களுக்கு டைட்டில் வின்னர் தருவதில்லை என்று நான் நம்புகிறேன். இறுதி போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேரில் புன்யா மற்றும் விக்ரம் ஆகியோர்தான் பிரில்லியண்டானவர்கள். கடந்த முறை சத்யபிரகாஷுக்கு வின்னர் டைட்டில் தராததில் இருந்தே இவர்களின் போங்கு தொடங்கிவிட்டது. எப்பவாவது நியாயமா சங்கீதத்தை மட்டும் கௌரவிக்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பார்கிறேன்” என்று ஒரு பதிவை ட்வீட் செய்திருந்தார்.
இதனையடுத்து மேலும் ஒரு ட்வீட்டில் ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்தும் விமர்சித்து பதிவிட்டுள்ளார். “விஜய் டிவி சூப்பர் சிங்கர் குறித்து பதிவிட்டபோது என்னுடைய நியாபக மறதியால் இதை விட்டுவிட்டேன். கடைசியாக வெளிவந்த ஜூனியர் சீசனிலும் ஹிருத்திக் என்ற குழந்தை மேதைதான் தகுதியான வெற்றியாளர்” என்று கடுமையான விமர்சித்துள்ளார்.