Skip to main content

"எப்பதான் சரியான ஆளுக்குத் தருவீங்க..." - சூப்பர் சிங்கர் வின்னர் குறித்து ஸ்ரீப்ரியா காட்டமான விமர்சனம்

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

சூப்பர் சிங்கர் சீசன் நிகழ்ச்சியின் 7 நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் மூக்குத்தி முருகன், சாம் நிஷாந்த், புன்யா, விக்ரம், கௌதம் ஆகியோர் இறுதி சுற்றுக்கு சென்றனர். இறுதிச் சுற்றில் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு பாடல்களைப் பாடினர்.  இறுதியில் மூக்குத்தி முருகன் டைட்டிலை வென்று முதல் பரிசு, ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீட்டை பரிசாகப் பெற்றார். அவருக்கு அனிருத் இசையில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. இரண்டாவது இடம் விக்ரமுக்கு கிடைத்தது. அவருக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் பரிசாக வழங்கப்பட்டன. 3-வது இடத்தை சாம் நிஷாந்த், புன்யா ஆகிய இருவரும் பெற்றனர். 
 

sri priya

 

 

இந்நிலையில் இந்த டைட்டில் வின்னர் குறித்து இந்த நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்தார் நடிகை ஸ்ரீபிரியா. அதில், “விஜய் டிவியில் நடக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இசையில் கைதேர்ந்தவர்களுக்கு டைட்டில் வின்னர் தருவதில்லை என்று நான் நம்புகிறேன். இறுதி போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேரில் புன்யா மற்றும் விக்ரம் ஆகியோர்தான் பிரில்லியண்டானவர்கள். கடந்த முறை சத்யபிரகாஷுக்கு வின்னர் டைட்டில் தராததில் இருந்தே இவர்களின் போங்கு தொடங்கிவிட்டது. எப்பவாவது நியாயமா சங்கீதத்தை மட்டும் கௌரவிக்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பார்கிறேன்” என்று ஒரு பதிவை ட்வீட் செய்திருந்தார்.

இதனையடுத்து மேலும் ஒரு ட்வீட்டில் ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்தும் விமர்சித்து பதிவிட்டுள்ளார். “விஜய் டிவி சூப்பர் சிங்கர் குறித்து பதிவிட்டபோது என்னுடைய நியாபக மறதியால் இதை விட்டுவிட்டேன். கடைசியாக வெளிவந்த ஜூனியர் சீசனிலும் ஹிருத்திக் என்ற குழந்தை மேதைதான் தகுதியான வெற்றியாளர்” என்று கடுமையான விமர்சித்துள்ளார். 

 

IIT

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மனோவை கொண்டாடிய சிறப்பு விருந்தினர்கள்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
super singer 10 mano special

சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10வது சீசன் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில், கடந்த வாரம் பாடகர் மனோவின் 40 வருடத் திரைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில்,  மனோ ஸ்பெஷல் சுற்று நடத்தப்பட்டது. இந்தியத் திரையிசையுலகில் 40 வருடங்களைக் கடந்திருக்கும் பாடகர் மனோ, இதுவரையிலும் 35000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்கள், முன்னணி நட்சத்திரங்கள், முன்னணி பாடகர்கள் என அனைத்து பிரபலமான கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார். 3000க்கும் மேற்பட்ட நேரடி மேடை இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் நீதிபதியாகவும் கலந்துகொண்டு,  பல அறிமுகப் பாடகர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார். 

இந்நிகழ்ச்சியில் மனோவை கௌரவிக்கும் விதமாக, அவருக்காகவே இசைத் துறையிலிருந்து இசையமைப்பாளர் சிற்பி, மால்குடி சுபா, உண்ணி மேனன், கல்பனா முதல் பல இசை மேதைகள் கலந்துகொண்டனர். மேலும் ஒரு சிறப்பாக இதுவரை எந்த ஒரு மேடையிலும் அதிகமாகக் கலந்துகொள்ளாத, மனோவின் நண்பர் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மனோவின் பாடல்களைக் கொண்டாடும் விதமாக சூப்பர் சிங்கர் ஜூனியர் முன்னாள் சீசன் 9 மற்றும் 10 போட்டியாளர்கள் இணைந்து, மனோவிற்காக ஒரு சிறப்பு சங்கீத நிகழ்வை அரங்கேற்றினார்கள். இந்நிகழ்வில் மனோவின் குடும்பத்திலிருந்து அவரது மகன், மனைவி உட்பட குடும்பத்தினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

இறுதியாக பாடகர் மனோ, இது என் வாழ்வில் மிக முக்கியமான மறக்க முடியாத சந்தோச தருணம் என்று தெரிவித்ததோடு, இந்நிகழ்ச்சியில் மிக அற்புதமாகப் பாடிய சஞ்சீவ் எனும் பாடகருக்குத் தனது கைக்கடிகாரத்தைப் பரிசளித்தார்.

Next Story

சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்த பாடகி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
super singer participation meets sivakarthikeyan

சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10 வது சீசன் ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த 10 வது சீசனில் பலதரப்பட்ட பின்னணியிலிருந்து பல பாடகர்கள் பங்கேற்றுள்ளனர். பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்  ஆகியோர் நீதிபதிகளாகப் பங்கேற்றுள்ளார்கள்.  

ஆரம்ப கட்ட எபிஸோடு ஒன்றில் பங்கேற்ற, கேரளாவைச் சேர்ந்த தன்ஷிரா எனும் பாடகி, சிவகார்த்திகேயனைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆசையில் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததாகத் தெரிவித்திருந்தார், தற்போது இவர் தமிழில் எம்.ஏ பட்டப்படிப்பைப் படித்து வருகிறார். நிகழ்ச்சியில் இவரின் குரலும் பாடல்களும் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.  

இவரின் ஆசையை நிகழ்ச்சி மூலம் அறிந்த சிவகார்த்திகேயன், அவரை நேரில் வரவைத்து அவருக்கு சர்ப்ரைஸ் தந்தார். இதன் வீடியோ பதிவு, இந்த வார நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படவுள்ளது. இதற்கான புரோமோ வீடியோவில்,  சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்த தருணத்தை நம்ப முடியாத தன்ஷிரா, அவரை கண்ணீருடன் கட்டியணைத்துக் கொண்டார். அவருடன் உரையாடி மகிழ்வித்த சிவகார்த்திகேயன், இவர் என் சகோதரி பார்த்து மார்க் போடுங்கள் என நிகழ்ச்சியின் நீதிபதிகளிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டார்.