நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக நடக்கும் தொந்தரவுகளை இந்திய திரையுலகை சேர்ந்த நடிகைகள் சமீபகாலமாக தைரியமாக வெளி உலகிற்கு கொண்டுவந்த வண்ணம் உள்ளனர். இதில் சமீபத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசி வந்த சர்ச்சைகளுக்கு பேர் போன பிரபலஇயக்குனர் ராம்கோபால் வர்மா அவரை தனது படத்தில் நடிக்க வைப்பேன் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில்தனது புதிய படத்தில் ஸ்ரீரெட்டிக்காக அவர் புதிய ஒரு கதாபாத்திரத்தை அவர் உருவாக்கி இருப்பதாகவும் விரைவில் ஸ்ரீரெட்டி அதில் நடிப்பார் என்றும் தெலுங்கு பட உலகில் தகவல்கள் வெளியாகியுள்ளன.