sri reddy

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு பட உலகில் பாலியல் புகார் அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். பின்னர் சமூகவலைத்தளத்தில் தன்னை படுக்கையில் பயன்படுத்தி ஏமாற்றி விட்டதாக கூறி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் விவரங்களையும் வெளியிட்டு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதையடுத்து தமிழ் திரையுலகிலும் இதே குற்றச்சாட்டை பல்வேறு நடிகர்கள், இயக்குனர்கள் மீது சாட்டி மீண்டும் சர்ச்சை உண்டாக்கினார். இந்நிலையில் ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘ரெட்டி டைரி’ படத்தில் நடிக்கவிருக்கும் அவர் தற்போது தெலுங்கு இயக்குனர் ராம்கி மீது பாலியல் புகார் கூறி மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார். தன் முகநூல் பக்கத்தில் இயக்குனர் ராம்கியின் வாட்ஸ் அப் உரையாடலை வெளியிட்டு..."இதனை எனக்கு எஸ்.எம். என்பவர் அனுப்பி வைத்தார். பாலியல் தேவைக்கு இளம் பெண்களை ராம்கி கேட்டு இருக்கிறார். அவரைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்’’ என்று பதிவிட்டு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.