Skip to main content

"இதுபோன்ற நடத்தையை யாருடனும் விவாதிப்பது சரியா? தவறா?..." - ஸ்ரீப்ரியா ஆதங்கம்!

Published on 27/05/2021 | Edited on 27/05/2021

 

vgsbsdbs

 

கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. தமிழகத்திலும் அதிகளவில் கரோனா பாதிப்பு இருந்துவருகிறது. இதனால், முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுத்துவருகின்றனர். இந்நிலையில், சென்னை கே.கே நகரில் அமைந்துள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகப் புகார்கள் அளித்துள்ளனர். இதையடுத்து அவர் தற்போது போலீசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கிறார்.

 

ஆசிரியரின் இந்தச் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், நடிகையும் மக்கள் நீதி மய்யத்தின் தலைமை பேச்சாளருமான ஸ்ரீபிரியா கண்டனம் தெரிவித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "மாணவர்களை துன்புறுத்தும் ஆசிரியர்... இதுபோன்ற நடத்தையை யாருடனும் விவாதிப்பது சரியா? அல்லது தவறா? என்று குழந்தைக்குத் தெரியாதபோது, அது பாதிக்கப்படக்கூடிய பெண் எந்தவகையில் பாதிக்கப்பட்டாலும், ஒவ்வொரு குழந்தையும் குறிப்பாக பெண்கள், ஏதோவொரு விதத்தில் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள். எனவே ஆசிரியரிடமிருந்து இதுபோன்ற பிரச்சினைகள் வரும்போது நாம் உடனடியாக அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இப்ப எதுக்கு வந்தீங்க? ஸ்ரீபிரியாவிடம் கேள்வி எழுப்பிய மக்கள்..! (படங்கள்)

Published on 03/04/2021 | Edited on 03/04/2021

 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் ஸ்ரீபிரியா, அத்தொகுதி முழுவதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் சென்னை சிட்டி சென்டர் எதிரில் வாக்கு சேகரித்த ஸ்ரீபிரியாவிடம், “கரோனா காலத்துல சாப்பாட்டுக்கே வழியில்லாம இருந்தோம். அப்பல்லாம் வராம இப்ப எதுக்கு வந்தீங்க?” என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர்.  

 

 

Next Story

பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை ஸ்ரீபிரியா..! (படங்கள்)

Published on 01/04/2021 | Edited on 01/04/2021

 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலையொட்டி வேட்பாளர்கள் பலரும் அவர்களது தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதே போல், சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீபிரியா தொடர்ந்து தொகுதி முழுவதும் திறந்த ஆட்டோவில் நின்றபடி பிரச்சாரம் செய்து வருகிறார்.