fsafsa

Advertisment

கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், இதன் காரணாமாக திரையுலகம் முழுவதுமாக முடங்கியுள்ளது. இதனால் நடிகர் நடிகையர் வீட்டிலேயே இருந்து வரும் நிலையில் கரோனா நேரத்தில் பாதுகாப்பாக வெளியே வருவது குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்...

''நாம் அனைவரும் இயல்பு நிலைக்கு வர முயற்சிக்கையில், வைரஸ் இன்னும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்வோம். எனவே, நம் இயக்கங்கள் மற்றும் அட்டவணைகளை நாமே கண்காணிக்க வேண்டும்.நாம் அதை வெளிப்படுத்தினால், நம் தொடர்பைத் தடமறிய இது உதவியாக இருக்கும். மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற மறக்காதீர்கள்.பாதுகாப்பாகச் சுற்றவும்!'' எனக்குறிப்பிட்டுளார்.