Skip to main content

“இயலாமை எங்களை கேட்க செய்தது..”- எஸ்.ஆர். பிரபு காட்டம்

Published on 14/09/2020 | Edited on 14/09/2020
sr prabhu

 

 

தயாரிப்பாளர்கள் சார்பாக திரையரங்க உரிமையாளர்களிடம் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பதிலடி கொடுத்தார்.

 

இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு இதுகுறித்து தெரிவிக்கையில், “நம் வியாபார முறை என்பது, படம் நாங்கள் எடுக்கிறோம், பார்வையிடும் வசதி நீங்கள் தருவீர்கள். பார்வையாளரிடம் இருந்து வசூலிக்கும் தொகையை திரையரங்கு தரம் பொருத்து நாம் பேரம் முறையில் பங்கிட்டுக் கொள்வோம் என்பது. ஆனால் இடைப்பட்ட காலத்தில் VPF மூலமும், ஆன்லைன் புக்கிங் மூலமும் திரையரங்குகள் தனியாக பிரித்து அதிக லாபம் ஈட்டுவதே எங்கள் பிரச்சனை. நீங்கள் ப்ரொஜெக்டர் வாங்க, மாற்ற தயாரிப்பாளரிடம் பணம் வாங்கி வருவது தவறில்லை என்றால், நாங்கள் விளம்பர வருவாயை கேட்பதும் எவ்வித தவறும் இல்லை.

 

இவ்வளவு காலம் ஏன் கேட்கவில்லை என்றால், உண்மையில் நாங்கள் நிலைகுலைந்திருந்தோம். உங்களையே சார்ந்து இருந்தோம். எல்லா வகையிலும் இழப்பை மட்டுமே கண்டு வருகிறோம். இயலாமை எங்களை கேட்க செய்தது. அதை பார்த்து நன்றி அற்றவர்கள் என்று கூறுகிறீர்கள். ஏமாற்றப்பட்டவர்களாக உணரும் எங்களிடம் எப்படி நன்றி எதிர்பார்க்கிறீர்கள்.

 

20 வருடகால திரைப்படவரலாற்றில் தயாரித்து நல்ல நிலைக்கு வந்துள்ள தயாரிப்பாளர்களை தேடிப்பாருங்கள். நல்ல நிலையில் முன்னேறிய பைனான்சியர், distributor-களை உங்களால் காண இயலும். ஆனால் எத்தனை தயாரிப்பாளர்களை காணமுடிகிறது. சண்டையிடுவதும், வாதம் செய்வதும் எங்கள் நோக்கமல்ல. தற்போது எங்களுக்கு எங்கள் வாழ்வியல் மட்டுமே முக்கியம். தயாரிப்பாளர் வாழ்ந்தால் அனைத்தும் சுகிக்கும். அதுவே தீர்வு. இது சுயநலம் மட்டுமல்ல பொதுநலமும்தான்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்த்தின் நினைவிடத்தில் கார்த்தி கண்கலங்கியபடி அஞ்சலி!

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
karthi pays tribute to vijayakanth in his memorial

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

மேலும் அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விஜயகாந்த்தின் உடலுக்கு ரஜினி, கமல், விஜய், இளையராஜா என பல்வேறு திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். சூர்யா, பாரதிராஜா உள்ளிட்ட சிலர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்தனர். பின்பு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேடு அருகே உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

இந்த நிலையில் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் சிவகுமார், கார்த்தி தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி மற்றும் மலை வளையம் வைத்து மரியாதை செய்தனர். அப்போது கார்த்தி கண்கலங்கியபடி அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் மறைந்த தினத்தன்று கார்த்தி உருக்கமுடன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.      

Next Story

‘ஜப்பான்’ ரிலீஸ் தேதி அப்டேட்

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

japan release date update

 

கார்த்தி தனது 25வது படமான 'ஜப்பான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜுமுருகன் இயக்கும் இப்படத்தில் அனு இமானுவேல் நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இசை வெளியீட்டு விழா வருகிற 28 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. கார்த்தியின் 25வது படம் என்பதால் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

 

இதனை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.ஆர். பிரபு, "ஜப்பான் படம் தீபாவளியை முன்னிட்டு தமிழ் மற்றும் தெலுங்கில் உலகம் முழுவதும் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இசை வெளியீட்டு விழா 28 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. மாலை 6 மணி முதல் 9 மணி வரை திட்டமிட்டுள்ளோம். கார்த்தியின் 25வது படமென்பதால் அவரது திரைப் பயணத்தில் பயணித்த தொழில்நுட்பக் கலைஞர்கள், நண்பர்கள், அவரது குடும்பங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். 

 

தீபாவளி என்பதால் ரசிகர்களின் வரவேற்பு நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். காலை 9 மணிக்குதான் முதல் காட்சி ஆரம்பமாகிறது. இந்த படம் ஒரு நகைச்சுவை கலந்த நக்கல் படமாக இருக்கும். அரசியல் படம் கிடையாது. குடும்பத்தோடு வந்து ஜாலியாக சிரித்து மகிழும்படி ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும். அதற்குள் ராஜு முருகன் ஸ்டைலில் ஒரு சின்ன கருத்தும் இருக்கும். எல்லா அம்சங்களும் இருக்கும். ஆனால் முகம் சுளிக்கிற வன்முறை இருக்காது" என்றார்.