Advertisment

“வேறு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை”- எஸ்.ஆர். பிரபு!

sr prabhu

Advertisment

கரோனா அச்சுறுத்தலால் கடந்த 100 நாட்களாக சினிமா மற்றும் சின்னத்திரை ஷூட்டிங் எதுவும் நடைபெறவில்லை. மேலும், மூடப்பட்டுள்ள திரையரங்குகள் இனி எப்போது திறக்கப்படும் என்பதும் தெரியவில்லை. இதனிடையே, தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கடந்த 6ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நேற்று தயாரிப்பாளர்கள் மட்டும் கலந்து கொண்ட இணைய வழி ஆலோசனைக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, கலைப்புலி தாணு, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெவ்வேறு அணியில் போட்டியிட்டாலும் இதில் ஒற்றுமையாக அனைவரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

கரோனா ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை எப்படிச் சரி செய்யலாம் என்று இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது நடிகர்கள், நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருடைய சம்பளத்திலும் 50% வரை குறைப்பது என முடிவெடுக்கப்பட்டது.

Advertisment

சம்பளம் அதிகம் வாங்கும் நடிகர்களின் சம்பளத்தில் அதிகப்படியான சதவீதத்தையும், குறைவான சம்பளம் வாங்கும் நடிகர்களின் சம்பளத்தில் குறைவான சதவீதத்தையும் குறைக்கலாம் எனவும் ஆலோசனையில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சம்பளக் குறைப்பு குறித்து நடிகர்கள் சங்கம் மற்றும் இயக்குனர்கள் சங்கம் என அனைத்துச் சங்கங்களிலும் பேசி முடிவெடுக்கலாம் என்று ஒருமனதாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள தயாரிப்பாளார் எஸ்.ஆர். பிரபு, “கரோனாவுக்குப் பிந்தைய நிலை குறித்து நான் உட்பட சில தயாரிப்பாளர்கள் கலந்து ஆலோசித்தோம். பல்வேறு சங்கங்களுடன் ஆலோசித்துச் சம்பளம் உள்ளிட்ட தயாரிப்புச் செலவுகள் குறித்து ஒரு சுமுகத் தீர்வை எட்ட முடிவு செய்துள்ளோம். அதைத் தாண்டி வேறு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

sr prabhu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe