2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் எனப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ளனர். ஜே.ஜே. ஃபெரெட்ரிக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
நாளை இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பிரத்யேகமாக அமேசானில் பிரபலங்களுக்கு வெளியிட்டுள்ளது அமேசான் நிறுவனம். இதை பார்த்த பிரபலங்கள் படம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு இப்படம் குறித்து தெரிவிக்கையில், "நேற்று இரவு ப்ரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நள்ளிரவு முதல் உலகமெங்கும் வெளியாகிறது பிடிப்பான, நெஞ்சை உறைய வைக்கும் த்ரில்லர் படம். உலக வரலாற்றில் முதன் முறையாக உங்கள் இல்லங்களுக்கே நேரடியாக" என்று பதிவிட்டுள்ளார்.