special child wait to meet vijay in his house

விஜய்யின் 'திகோட்' திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களில் ரூ.288 கோடி வசூலித்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை, புதுச்சேரி, கேரளா எனப் பல்வேறு பகுதிகளில்நடைப்பெற்றது. இதில் கேரளாவில் திருவனந்தபுரம்கிரீன்ஃபீல்ட்ஸ்டேடியத்தில்படப்பிடிப்பு நடந்த நிலையில் அவரை காண ஏராளமான ரசிகர்கள்அங்குதிரண்டு வந்தனர்.

Advertisment

அந்த வகையில்கன்னியாகுமரியைசேர்ந்த மாற்றுத் திறனாளிரிஷான்என்ற குழந்தை,விஜய்யைசந்திக்க அவரது குடும்பத்தினருடன் காத்திருந்தார். அப்போதுவிஜய்யைபார்த்ததும் அக்குழந்தைவீல்சேரில்இருந்து எழுந்து உணர்ச்சிவசப்பட்டு விஜய்யை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினார். இதன் பிறகு ரிஷான்மனதளவிலும் உடலளவிலும்முன்னேற்றம்அடைந்துள்ளதாககூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் ரிஷானின்பெற்றோர் மீண்டும் விஜய்யைபார்க்க அவரது நீலாங்கரை வீட்டில் காத்திருந்தனர். ஏற்கனவேவிஜய்யைசந்தித்த போதுரிஷானின்நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் இருந்ததால் மீண்டும்விஜய்யைசந்திக்க வைக்கலாம் என அவர்கள்முடிவெடுத்திருப்பதாககூறப்படுகிறது. இதே போல் கடந்த 2021ஆம் ஆண்டுபிகில்படகாட்சிகளைகாட்டி சிறுவர் ஒருவருக்கு இராயபேட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தது குறிப்பிடத்தக்கது.