sp balasubramaniam

பிரபல பாடகர் எஸ்.பி.பி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது. அதனை தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் மக்கள் அவரது உடல்நலன் சரியாக வேண்டி கூட்டு பிரார்த்தனை நடத்தினார்கள்.

Advertisment

இதனிடையே தினசரி எஸ்.பி.பி உடல்நலன் குறித்து அவரது மகன் சரண் வீடியோ வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று பி.ஆர்.ஒ நிகில் முருகன்

தரப்பில் வெளியான தகவலின்படி எஸ்.பி.பிக்கு கரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டதில் நெகட்டிவ் என்று வந்துள்ளதாக தெரிவித்துள்ளாரர். மேலும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார் சரண். அதில், “வழக்கமாக மருத்துவர்களுடன் பேசிவிட்டுதான் அப்பாவின் உடல்நிலை பற்றி உங்களிடம் கூறுவேன். ஆனால், இன்று காலை வேறு வழியின்று ஒரு பதிவு போட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்பாவின் உடல்நிலை பற்றி என்னிடம் மட்டும்தான் மருத்துவமனையிலிருந்து தகவல் சொல்லப்படும். அதைத்தான் நான் பிறகு ஊடகங்களிடம் தெரிவிப்பேன்.

துரதிர்ஷ்டவசமாக இன்று காலை முதல் அப்பாவுக்கு கரோனா தொற்று இல்லை என்ற வதந்தி உலவிக் கொண்டிருக்கிறது. ஆனால், அவருக்கு கரோனா தொற்று இருக்கிறதோ, இல்லையோ, அவரது உடல்நிலை அப்படியேதான் இருக்கிறது.

மருத்துவ ரீதியாக செயற்கை சுவாசம், எக்மோ என அவர் உயிர் காக்கும் கருவிகளிடன் உதவியுடன்தான் இருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அவர் நிலையாக உள்ளார். இந்த நிலைத்தன்மை அவர் விரைவில் இதிலிருந்து மீள உதவும் என்று நம்புகிறோம்.

தயவுசெய்து புரளிகளைப் பரப்பாதீர்கள். மருத்துவர்களுடன் பேசிவிட்டு இன்று மாலை நான் பதிவிடுவேன். நன்றி''.என்று தெரிவித்துள்ளார்.